search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    ட்ரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிப்பது குறித்து விசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    • இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி நடைபெற்றது.
    • ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடிகிறது.

    மதுக்கூர்:

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் வேலாயுதின் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசரின் வழிகாட்டுதல்படி நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நடைபெற்றது.

    நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் யூரியா மேலுரம் இடுவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் 46 சத தழைச்சத்து கொண்ட யூரியா செய்யும் பணியை 4, சத தழைசத்துக் கொண்ட நானோயூரியா செய்கிறது.

    விவசாயிகள் பொதுவாக பரிந்துரைப்படி ஏக்கருக்கு இட வேண்டியது 22 கிலோ என்ற போதிலும் நிலவும் பருவ சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா வரை செலவு செய்கின்றனர்.

    தெளிப்பதற்கான செலவினம் தனியாக ரூ.300 ஆகிறது. ஆனால் நானோ யூரியா பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் நானோ யூரியா போதுமானது இதன் விலை ரூ.230, நானோ யூரியா, யூரியா போல வீணாக கரைவதும் இல்லை. ஆவி ஆவதும் இல்லை. நிலத்தடி நீருடன் கலந்து வீணாவதுமில்லை. நானோ யூரியா நேரடியாக பயிரினால் எவ்வித சேதம் இன்றி இலை வழி உரமாக நேரடியாக பயிரினா லா எடுத்து கொள்ளப்படுகிறது.

    விவசாயிகள் நெம்மேலி கிராமத்தில் ஒருங்கிணைந்து இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி மேற்கொண்டனர்.

    ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடித்து விடுகிறது. ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரியின் ஒத்துழைப்புடன் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் உதவியுடனும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர்அன்புமணி கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து நானோ யூரியா தெளித்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    நெம்மேலி கிராம முன்னோடி விவசாயிகள் பெரமையன், சேதுராமன், இருளப்பன் மற்றும் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு இது போன்ற திட்டங்கள் தங்களுக்கு மிக உதவியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி தொழில்நுட்ப உதவியாளர் அருள் தாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×