என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி
- சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி வரும் 21 -ந் தேதி முதல் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் பெயின்டிங் பற்றிய ஒரு அறிமுகம் ,பெயின்டிங் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம்,அதன் வகைகள் ,கட்டிடம் மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றில் பெயிண்டிங்கிற்கு முன் செய்யப்பட வேண்டிய வேலைகள், மேற்பரப்பை தயார் செய்யும் முறைகள், ப்ரைமர், எனாமல் புட்டி மற்றும் சிமெண்ட் புட்டி ஆகியவற்றை பூசும் முறைகள், பெயின்டிங் செய்யும் பரப்பை கணக்கிட்டு அதற்கு ஆகும் செலவுகளை நிர்ணயிப்பது ஆகியன பற்றி துறை சார்ந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.
பயிற்சியின் கால அளவு 10 நாட்களாகும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் 3 போஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் வரும் 18ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்