என் மலர்
நீங்கள் தேடியது "compromise"
- நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
- மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார்.கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வழக்குரைஞர் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.மோட்டார் வாகன வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்குரைஞர் மகா சண்முகம் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரத்து 902 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடி களுக்கு பெற்றுத் தரப்ப ட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
- சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.
இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியில் இருந்து மணல் திருடப்பட்டு வருவதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இன்று காலை சின்ன காந்திபுரம் பகுதியில் மணல் அள்ளி வந்த ஒரு லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பயிற்சி டி.எஸ்.பி. பரத், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
மணல் கடத்தல் குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரத்துடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக சொல்லிய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜை தாக்கினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தும் கேட்கவில்லை. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை எடுத்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.