search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "authorities"

    • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
    • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

    இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தங்களுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.
    • தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலு வலக சாலை மற்றும் மஞ்சக்குப்பம் மைதா னத்தை சுற்றிலும் 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஆக்கிரமிப்பு கடைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநக ராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர்கள், தங்க ளுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றாமல் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சில நாட்களாக ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாக அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி ஊழி யர்கள் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடை களை போலீஸ் பாதுகாப்பு டன் பொக்லைன் எந்திரங் கள் மூலம் அகற்றினர். அப்போது அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    இதில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையே பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதா னப்படுத்தினார். தொடர்ந்து தரைக் கடை மற்றும் தள்ளு வண்டி கடைகளை தவிர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    • திருவள்ளூர் சங்கையா கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட் சுமி, ஆணையாளர் முத்துக் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணி யன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு நிறைவேற்றப் பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. உறுப்பினர் முருகா னந்தம் மின்சாரம், குடிநீர், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை. ஏற்கனவே நடந்த பல கூட்டங்களிலும் இவர் கள் கலந்து கொள்ளவில்லை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆள் இல்லை. எனவே கூட்டத்தில் பங்கேற் காத துறை அதிகாரிகளைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தலைவர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த வேண் டும்.

    உறுப்பினர் முருகன் பேசும் போது அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிப்பதற்காக வாங்கப்பட்ட இயந்திரங் கள் எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாமலேயே அவைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிதி வீணடிக்கப்படு கிறது. அனைத்து ஊராட்சி களிலும் கொசுத் தொல்லை யால் மக்கள் அவதிப்படு கின்றனர். எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

    உறுப்பினர் கீர்த்தனா கனகராஜ் பேசும்போது அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளின் கழிப்பறையை பராமரிக்க வேண்டும். விளாங்குளத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும். திருவள்ளூர் சங்கையா கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.

    துணைத் தலைவர் தனலட்சுமி பேசும்போது ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடும் போது அனைத்து உறுப்பினர்களிடம் கலந்து பேசி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

    உறுப்பினரின் கேள்வி களுக்கு பதில் அளித்த ஆணையாளர் முத்துக்கும ரன் கோரிக்கைகள் நிறை வேற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    • பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறையில் சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த கலந்தாய்வை பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். கல்வித்துறை அலுவலகத்தில் திரண்ட அவர்கள், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணியிடங்கள் குறைப்பு மறைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், சீனியாரிட்டி அடிப்படை யான கலந்தாய்வினை நடத்த வலியுறுத்தியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல காரைக்காலில் உள்ள ஆசிரியர்களும் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    • அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர்.
    • அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

    கடலூர்:

    திட்டக்குடியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

    மேலும் இதில் டாக்டர் ஆனந்தி, மருந்தாளுனர் சரவணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாணவிகளை உடற்பரி சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். விடுதியை சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்யவும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது விடுதி காப்பாளர் செல்வரா ணி, வார்டு கவுன்சிலர் சுரேந்தர் உடனிருந்தனர்.

    • நயினார்பாளையம் 4 முனை சந்திப்பிலிருந்து சின்னசேலம் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • ஒரு தனி நபருக்காக 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் 100 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் (வயது 65 )கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருவதாகவும், மகன் சுரேஷ் திருமணமாகி வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நயினார்பாளையம் 4 முனை சந்திப்பிலிருந்து சின்னசேலம் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த குமரனுக்கு குத்தகைக்கு விட்டதாக கூஇவர்களுடைய நிலத்தின் அருகே செல்வம் என்பவருடைய நிலம் இருக்கிறது .

    செல்வம் நிலத்திற்கு செல்ல வழி இல்லை. எனவே இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பு குமரனிடம் தன்னுடைய நிலத்திற்கு செல்ல உங்களுடைய பட்டா நிலத்தில் 2 சென்ட் நிலம் கொடுங்கள். அதற்கு பதிலாக பணம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .அதற்கு குமரன் மறுப்பு தெரிவித்ததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.இந்தநிலையில் குமரன் நிலத்திற்கு அருகே நீர்நிலை புறம்போக்கு இருப்பதை அறிந்த செல்வம் பொதுப்பணி துறைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.இது சம்பந்தமாக நீர்நிலை புறம்போக்கை அகற்ற போகிறோம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் ஏதும் கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை ேஜ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றியது. இதில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை குமரனுக்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே அகற்றியுள்ளனர்.

    ஆக்கிரமிப்பை அகற்றும் போது தென்னை மரத்தை பெண் ஒருவர் கட்டிபிடித்து அழுத்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.பொதுவாக விவசாய நிலத்தில் பயிர்கள் இருந்தால் அதற்கான கால அவகாசம் வழங்கி பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது அரசு வழிமுறைகளில் ஒன்றாகும். இதனை மீறி ஒருதலை பட்சமாக பொதுப்பணித்துறை செயல்பட்டதாக கூறப்படுகிறது . இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்தார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார் ஒரு தனி நபருக்காக 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் 100 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பை பொதுப்பணி துறை அதிகாரிகள் அகற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அருகில் உள்ள தனியார் இடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 419 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

    மேலும்பள்ளி வாக னஓட்டுனர்கள் வாகன ங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கு ம்போதும் ஏறும் போதும் சரியாக கவனி த்து வாகனங்களை இய க்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாச்சலம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் பிரச்சினைகளை எளிதில் கையாள முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். #sagayam #tngovt #honest

    கோவை:

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நான் பொறுப்பில் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டு வருகிறது என கூற இயலாது.

    பொன் மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக, நான் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அரசு துறையில் இருக்கிற காரணத்தால் எதுவும் கூற இயலாது.

    எங்களை போன்ற அலுவலர்களை எங்கே பணியமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் அரசுக்கு உள்ளது. எந்த பணியிடம் அளித்தாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் இந்த பிரச்சினையை எளிதில் கையாள முடியும் என்றார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது பதவியை தொடர உயர்நீதிமன்றத்தை நாட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் நாம் அரசிடம் தான் தீர்வுக்காக எதிர்பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்றார். #sagayam #tngovt  #honest

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. எனினும் இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். #DrinkingWater
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    தற்போது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது.

    ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது வெறும் 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சோழவரம் ஏரி வறண்டதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கடந்த மாதங்களில் ஏரிகளில் போதிய தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டதால், சோழவரத்தில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சோழவரம் ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய தண்ணீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    சோழவரம் ஏரியானது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு முற்றிலுமாக வறண்டது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்பட்டால் அல்லது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்தால் மட்டுமே சோழவரம் ஏரியில் தண்ணீரை நிரப்ப முடியும்.

    இருந்த போதிலும் பூண்டி ஏரியில் 13 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 673 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 423 மில்லியன் கன அடி என 1.1 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.

    இதுதவிர வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #DrinkingWater
    எதற்கு சம்பளம் பெறுகிறோம் என உணர்ந்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில் விவசாயிகள் மற்றும் விதை நெல் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வேளாண்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குநர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பஜன்கோ முதல்வர் கந்தசாமி, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் வசந்தகுமார், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரத்தினசபாபதி, கூடுதல் வேளாண் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி பேசும்போது, விதை நெல் உற்பத்திக்கு பீடர் மற்றும் ஆதார விதையினை காலத்தோடு வழங்க வேண்டும். பாகூர் மற்றும் கரியமாணியத்தில் உள்ள சான்று விதை சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்து கொடுக்க வேண்டும். 5 ஆண்டுகளாக மானிய விலையில் வழங்கப்படாமல் உள்ள சில்ப்பாலின், ஷேர்நெட், நர்சரி ட்ரே மற்றும் கோனாவீடர் உடனடியாக வழங்க வேண்டும்.

    காரைக்கால் விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுக்கும் நெல்லுக்கு காலதாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஒரு சாக்கு மூட்டை பாசிக் மூலம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சாக்கு மூட்டை தனியாரில் ரூ.35க்கு தரமாகவே கிடைக்கிறது. ஏன் அதிக விலையில் விற்கிறீர்கள்? விவசாயிகளின் கஷ்டங்களை அரசு உணர்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

    அமைச்சர் கமலக்கண்ணன் விவசாயிகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

    புதுவையில் ஆரம் பிக்கப்பட்ட பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் முதலில் விவசாயிகளுக்கு இடுபொருள் கொடுப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவ தொடங்கப்பட்டது.

    ஆனால், இதனை யாரும் செய்யவில்லை. இதற்கு முன் இருந்தவர்களும் அக்கறை செலுத்தவில்லை. இப்போது உள்ளவர்களும் அக்கறை செலுத்த போவதில்லை. வருங்காலத்திலும் அக்கறை காட்ட போவதில்லை. நிம்மதியாக இருந்த விவசாயிகளிடம் அதிகாரிகள்தான் தொழில்நுட்பத்தை கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வேளாண்துறை சம்பந்தமான உரம், பூச்சி மருந்து, நெல் எடுத்தல் ஆகியவற்றுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் அதிகாரிகளுக்கு சம்பளம் போடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கூறியுள்ளேன். விவசாயிகள் கூறும் பல வி‌ஷயங்களில் எனக்கும் ஆதங்கம் உள்ளது. இயக்குனர், அதிகாரிகளிடம் என்னுடைய பாணியில் தெரிவித்தேன். அவர்கள் என்னை விட்டுவிடுங்கள் வேறு துறைக்கு போய்விடுகிறோம் என்கிறார்கள்.

    அவர்களாக விரும்பி கடிதம் கொடுக்கும்வரை விடமுடியாது. வேளாண்துறைக்கு வந்து பணியாற்றும் அதிகாரிகள் எதற்காக சம்பளம் வாங்குகிறோம் என்பதை மனதில் வைத்து விவசாயிகளுக்கு பணியாற்ற வேண்டும்.

    விவசாயிகளின் வரி பணத்தில் இருந்துதான் அவர்களுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தாண்டு விதை நெல் தொடர்பான வி‌ஷயங்கள் சரியாக நடைபெறவில்லை என்றால், விவசாயிகள் கூறும் குறைகளை கோப்பில் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மழைக்காலங்களில் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். #pollachijayaraman #rainflood

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மழை வெள்ள எச்சரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சி.மகேந்திரன் எம்.பி., வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் காயத்திரி, பொள்ளாச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கோஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், ஒன்றியச்செயலாளர்கள், சக்திவேல், கார்த்திக் அப்புச்சாமி, தம்பு, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால் பாறை கீழ் பகுதிகளை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தனர். மேலும், மழை பாதிப்புக்கு தேவையான உதவிகள் குறித்தும் கூறினர்.

    அனைத்து அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது-

    தென்மேற்கு பருவமழை கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுப்பகுதிகளில்தான் அதிகம் பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சில பள்ளிகள் மழைக்கு ஒழுகுவதாகவும், ஜன்னல் களுக்கு கதவுகள் இன்றி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் புகார் உள்ளது.

    இதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள சத்துணவுகூடங்கள், சமையல் அறைகள் போன்றவையும் கண்காணிக்கப் பட வேண்டும். சில இடங்களில் சமையல் அறைகள் சிதலமடைந்து சமைக்க தகுதியற்று இருப்பதாக தெரிகிறது. அங்கன்வாடி மையங்கள், ரேசன்கடைகள் போன்றவை முக்கியமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

    இந்த கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள வேறு அரசு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இதை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும், கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும், ஆழியாற்றில் யாரையும் குளிக்க அனுமதிக்கூடாது, மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ள உப்பாற்றில் குளிக்க தடை விதிக்க வேண்டும், நெச வாளர்கள் மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவு வேண்டும்.

    மழையில் இடிந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.5000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும், வீடுகள் இடிந்து சேதமானதில் ரேசன்கார்டு, ஆதார்கார்டு போன்றவை சேதமடைந்திருந்தால் அடையாள அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும். அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர், ஜேம்ஸ்ராஜா, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #pollachijayaraman #rainflood

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையின் இன்றைய நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #Idukkidam
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி, செருத்தோனி, குலமாவு ஆகிய நீர்தேக்கங்களுக்கான இடுக்கி அணைக்கட்டு உள்ளது. இந்த நீர்தேக்கத்தையொட்டி இடுக்கி புனல் மின்சார உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் கேரளாவின் பல பகுதிகளில் பெய்த பெருமழையால் இடுக்கி நீர்தேக்கத்தில் அதிகமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கட்டு பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2403 அடியாக உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,394.72 அடியாக இருந்தது. நீர்மட்டம் 2395 அடியாகும்போது, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். 2397 அடியாக உயரும்பட்சத்தில் ஓரிரு மணி நேரத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கு திறந்து விடப்படும் நீர் அருகாமையில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும். இந்நிலையில், வெள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் இடுக்கியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் உள்ள தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ராணுவம், விமானப்படை மற்றும் சிறியரக படகுகளுடன் கப்பற்படையினரும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு இடுக்கி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது. #Idukkidam  #Idukkidamfulllevel #Idukkidamalert 
    ×