search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டம்
    X

    ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டம்

    • அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    • திருவள்ளூர் சங்கையா கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட் சுமி, ஆணையாளர் முத்துக் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணி யன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு நிறைவேற்றப் பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. உறுப்பினர் முருகா னந்தம் மின்சாரம், குடிநீர், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை. ஏற்கனவே நடந்த பல கூட்டங்களிலும் இவர் கள் கலந்து கொள்ளவில்லை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆள் இல்லை. எனவே கூட்டத்தில் பங்கேற் காத துறை அதிகாரிகளைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தலைவர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த வேண் டும்.

    உறுப்பினர் முருகன் பேசும் போது அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிப்பதற்காக வாங்கப்பட்ட இயந்திரங் கள் எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாமலேயே அவைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிதி வீணடிக்கப்படு கிறது. அனைத்து ஊராட்சி களிலும் கொசுத் தொல்லை யால் மக்கள் அவதிப்படு கின்றனர். எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

    உறுப்பினர் கீர்த்தனா கனகராஜ் பேசும்போது அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளின் கழிப்பறையை பராமரிக்க வேண்டும். விளாங்குளத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும். திருவள்ளூர் சங்கையா கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றார்.

    துணைத் தலைவர் தனலட்சுமி பேசும்போது ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடும் போது அனைத்து உறுப்பினர்களிடம் கலந்து பேசி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

    உறுப்பினரின் கேள்வி களுக்கு பதில் அளித்த ஆணையாளர் முத்துக்கும ரன் கோரிக்கைகள் நிறை வேற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×