search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confirmed"

    • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
    • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

    இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்ற சூழலை உருவாக்குவேன் என பெரம்பலூர் புதிய எஸ்.பி. சியாமளாதேவி உறுதி அளித்துள்ளார்
    • பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டாக பணியில் இருந்த மணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு துணை கமிஷன–ராக பணியாற்றி வந்த ச.ஷியா–மளா தேவி பெரம்ப–லூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டாக நியமிக்கப்பட் டார். இதையடுத்து பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பெரம்ப–லூர் மாவட்ட 6-வது பெண் போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப் பிடத்தக்கது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய–தாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பங்களை தடுத்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக–வும் பாதுகாப்பான மாவட் டம் என்ற சூழலை உரு–வாக்குவேன். சாலை விபத் துகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்ட–மாகவும் மாற்றுவேன். ரவுடிகள், சமூக விரோ–திகளை ஒடுக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியாக வாழும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுப் பேன் என்றார். இதையடுத்து வாரந் தோறும் புதன்கிழ–மைக–ளில் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை மற்றும் குறைதீர்க்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீஸ் சூப்பி–ரண்டு ச.ஷியாமளா தேவி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெற்ற–தோடு, அவர்களிடம் குறை–களையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி புகார் மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சி–னைகளை தீர்த்து வைக்கு–மாறும், அவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை வழங்குமாறும் போலீசா–ருக்கு அறிவுரைகள் வழங்கி–னார்.


    • பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் உறுதியளித்தனர்
    • இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவால் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு எதிரே பேருந்து நிழற்குடை சேதமடைந்து இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதனை அகற்றிவிட்டு, அதே இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், அப்பகுதியில் அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிழற்குடை கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிழற்குடை அமைக்கும் பணி தடைப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்ட கோரி, கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில்

    மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பயணியர் நிழல் குடை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த அடிப்படையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்ட த்தால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார். #VijayMallya
    இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000 கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார். 

    விஜய் மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளின் விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் 100 சதவீதம் வங்கி கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என உறுதியாக கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை ஏன்? 

    இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவையெல்லாம் வர்த்தக தோல்விகளாகும். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன் என்ற பின்னரும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார். #VijayMallya
    தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மரங்களை அகற்ற சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #gajacyclone

    சென்னை:

    தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் பொன்.ராதா­கிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், மாநில பா.ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், வேதரத்தினம் ஆகியோர் டெல்லியில் மத்திய விவசாய மந்திரி ராதாமோகனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது புயல் சேதங்கள் மற்றும் அந்த பகுதியின் தற்போதைய நிலைமை, என்னென்ன வகைகளில் அந்த பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவுவது என்று விவாதித்தனர். இன்று சென்னை திரும்பிய வானதி சீனிவாசன் இதுபற்றி கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிலவும் கள நிலவரங்களை மத்திய மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதையடுத்து மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க ஒத்துக் கொண்டார்.

    மத்திய அரசின் தென்னை வாரியம் மூலம் தென்னங்கன்றுகள் வழங்க சிறப்பு நிதி வழங்க மத்திய நிதி மந்திரியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

    குறுகிய கால பயிர், ஊடுபயிர் திட்டத்தின் மூலம் பயிர் வளர்ச்சிக்காக அந்த பகுதிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

    தென்னை மரம் வளர்ந்து பலன் கொடுக்கும் காலம் வரை விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றியும் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    தமிழக அரசு கொடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசு சில விளக்கங்கள் கேட்டுள்ளது. அது கிடைத்ததும் நிவாரண நிதி வழங்குவார்கள்

    மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக பொத்தாம் பொதுவாக சொல்வது தவறு. தமிழக வேளாண் அமைச்சர், வீட்டு வசதி அமைச்சர், கிராம மேம்பாட்டுத்துறை என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் டெல்லி சென்று துறை மந்திரிகளை சந்தித்து ஒவ்வொரு துறையிலும் தேவையான திட்டங்களை பெறுவதற்கு முயற்சிக்கலாம். இங்குள்ள நடைமுறை சிக்கலை எடுத்து சொல்லி அதற்கு ஏற்றவாறு முயற்சிகள் மேற்கொண்டால் ஏதுவாக இருக்கும்.

    என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் பாராமுகமாக இருப்பதாக கூறினால் எப்படி? மத்திய அரசு பார்த்து கொண்டு தான் இருக்கிறது. கேட்பதை செய்வதற்கு காத்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone 

    காங்கோ நாட்டில் மீண்டும் எபேலா வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாகவும், கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congo #EbolaVirus
    கின்சசா:

    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

    இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சுகளும் பாதிப்புக்கு ஆளாகினர்.

    இப்போது மறுபடியும், காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மபண்டாகா நகரில் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வைரஸ் நோய் பரவி வருவதை காங்கோ நாட்டின் சுகாதார மந்திரி ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்தார்.



    தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்து உள்ளது.  #Congo #EbolaVirus
    ×