search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna river"

    • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
    • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

    இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் வந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 300 கன அடிவீதம் வந்தடைந்தது.

    இந்நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தற்போது கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 215 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அட. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.26 அடியாக பதிவானது. 1.027 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    • 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
    • ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை அய்யப்பன் தாங்கல் ஆயில் மில் சாலையில் காலி நிலம் உள்ளது. இது கிருஷ்ணாநதி நீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும். இங்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேங்கும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. 450 தெருக்களில் இருந்து 12.5 டன் குப்பைகள் இந்த நிலத்தில் கொட்டப்பட்டன.

    இதனால் இந்த இடம் சுகாதார சீர்கேடாக மாறி யது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்ப வர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அய்யப்பன் தாங்கல் மட்டுமின்றி குன்றத்தூர் பஞ்சாயத்து எல்லைக்கு உள்ளிட்ட கெருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளி லும் இதேபோன்று குப்பைகள் கொட்டும் பிரச்சினைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்காக உள்ளாட்சி அமைப்பு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் ஆயில்மில் சாலையில் கொட்டப்பட்ட 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.

    இதையடுத்து இங்கு 90 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "ஆயில்மில் சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாலும், தற்போது அதற்கு இணையாக உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலமும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்றனர்.

    • தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை.
    • ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம்

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி ஆகும்.

    பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.

    தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளவை எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை முதல் தவணையில் 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது வந்து கொண்டு இருக்கும் கிருஷ்ணா தண்ணீரையே தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதமே தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி இந்த மாதம் (ஜனவரி) முதல் ஏப்ரல் வரையிலான 2வது தவணையாக வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் திறப்பை நிறுத்தி வைத்து விட்டு சில மாதங்கள் கழித்து திறக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.

    கண்டலேறு அணையில் இருந்து தற்போது 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 2,899 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 165 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீருக்காக லிங்க் கால்வாய் மூலம் 550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 3,115 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,491 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 10 ஆயிரத்து 775 மி.கன அடி (10.7 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது.

    இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி. ஏரிக்கு கடந்த 29-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 706 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடும் மதகுகளை பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் வந்து சேரும் பகுதிக்கு சென்றார்.

    அப்போது கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் பொது மக்கள் யாரும் குளிக்காமலும், துணி துவைக்காமலும் தடுக்க அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    மேலும் கால்வாய் நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி கால்வாயில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

    பின்னர் அவர் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாய், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் உடன் இருந்தனர். #tamilnews
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிகசர்லா பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள் நேற்று, அருகில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். 

    அப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற மூன்று பேரும் ஆற்றுல் குதித்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 



    இதையடுத்து இன்று நான்கு பேரின் உடல்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் கிருஷ்ணா சய்தன்யா ரெட்டி, ஸ்ரீநாத், ராஜ் குமார் பில்லா, பிரவீன் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். 

    இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×