என் மலர்
நீங்கள் தேடியது "Poondi Lake"
- பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
- கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவள்ளூர்:
தமிழகத்தின் மேற்கு பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் திருத்தணியில் 13 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சராசரியாக 500 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அதிரடியாக உயர்ந்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு 1520 கனஅடியாக உயர்ந்தது.
இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 34 அடியாக உயர்ந்து உள்ளது. ஏரியில் மொத்தம் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரியில் 2792 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 35 அடியை எட்டிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.
எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை.
- தற்போது பூண்டி ஏரியில் 2624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 1944-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன. ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்த பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடம்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கடந்த மே 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ம் தேதி பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது வரை பூண்டி ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. கிருஷ்ணா தண்ணீருடன் மழை நீரும் வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று பூண்டி ஏரிக்கு 630 கனஅடிவரை தண்ணீர் வந்தது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் தற்போது அதன் முழு கொள்ளளவில் 81 சதவீதம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2624 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. அதன் மொத்த உயரமான 35 அடியில் 33.35 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து லிங்க் கால்வாய் மூலம் 380 கனஅடிவீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரி கட்டப்பட்டதில் இருந்து இதுவரை அதன் ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பூண்டியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகின்றது இந்த ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது பூண்டி ஏரியில் 2624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது
தற்போது 1,2,4,5,6,14,15 ஆகிய ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷட்டர்களில் இருந்து அதிகளவு நீர்க்கசிவு ஏற்பட்டு உபரிநீராக செல்கின்றன. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொதுப்பணித்துறையினர் உடனடியாக பூண்டி ஏரியின் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்கை மாற்றி சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களுக்கு முக்கியமானது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கல்குவாரி தண்ணீர், விவசாய கிணறு மற்றும் ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. எனவே தற்போது ஏரியில் உள்ள தண்ணீரை உரிய முறையில் பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டும். ஏரியின் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். இல்லை எனில் இதுவே மதகுகளுக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது கூறியதாவது:-
பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் நீர்க்கசிவை ஊழியர்கள் தினமும் சரி செய்து வருகின்றனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஷட்டர்களில் அதே இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நீர்க்கசிவுக்கு நிரந்தர தீர்வுக்காக மதிப்பீடு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும்.
அதற்கான நிதி வந்தவுடன் ஷட்டர் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். பூண்டி ஏரியில் நீர் முழுவதும் வடிந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும். தற்போது அப்பணிகளை மேற்கொண்டால் தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியே சென்று விடும் என்றார்.
- கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீர் தேவைக்காக தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவடட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தற்போது பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1030 கனஅடியாக இருந்தது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லி யன் கனஅடி. இதில் 2586 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
ஏரிக்கு மழைநீர் 650 கனஅடியும், கிருஷ்ணா தண்ணீர் வரத்து 380 கன அடியாகவும் இருந்தது. 480 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 300 கனஅடி அனுப்பப்படுகிறது.
- கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
- மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவள்ளூர்:
சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி சுகந்தி(வயது39). இவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்ததும் அனைவரும் பூண்டி ஏரிக்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
ஆழமான பகுதிக்கு சென்ற சுகந்தி தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டனர். மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது.
- கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக ஆவடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
ஜமீன்கொரட்டூர்-74
செங்குன்றம்-34
கும்மிடிப்பூண்டி-5
பள்ளிப்பட்டு-20
ஆர்.கே.பேட்டை-54
சோழவரம்-28
பொன்னேரி-16
பூந்தமல்லி-23
திருவாலங்காடு-26
திருத்தணி-32
தாமரைப்பாக்கம்-23
திருவள்ளூர்-54
ஊத்துக்கோட்டை-3.
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு அதிகபட்சமாக 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு3300 மி.கனஅடி. இதில் 1866 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு3645மி.கனஅடி. இதில் 2688 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 429 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 128 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி எரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2337 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- சென்னை குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 6,816 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.
குடிநீர் ஏரிகளில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2,623 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை குடிநீர் தேவைக்காக 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1803மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் 130 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 110மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 1936மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 258கனஅடி தண்ணீர் வருகிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி எரிக்கு ஏற்கனவே கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் விட்டு விட்டு நீடித்த மழை இரவு பலத்த மழையாக பெய்தது.
விடிய விடிய கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 2698 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடி வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 1700 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 70 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 1955 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 190 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 189 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு பஸ் நிலையம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழையாக நீடிக்கிறது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர்:
வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப்பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழையாக நீடிக்கிறது. நேற்று மதியம் கனமழையாக சில இடங்களில் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. ஏற்கனவே மழைநீர் கால்வாய், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கின. குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் விட்டு விட்டு கன மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் பலத்த மழை கொட்டுவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 2137மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு146 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 192 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 2375மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 302 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 163 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் தற்போது 2075 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழை நீர் சேர்ந்து 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 405 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 370மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.
திருவள்ளூரில் அதிகபட்சமாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போல் ஊத்துக்கோட்டையில் 13 மி.மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 10 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது.
- கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த 2 மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் தற்போது 2082 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2235 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 89 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2347 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன. அடியில் 377 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் மொத்தம் 7130 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த தண்ணீர் இருப்பில் 60 சதவீதம் ஆகும்.
- நீர்வளத்துறை உடனடியாக ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்
சோழவரம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து முதல் முறையாக தண்ணீர் ஆவியாவதை தடுக்க புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சோழவரம் ஏரியில் 1081 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது 95 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இந்த ஏரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் தண்ணீர் முழுவதும் வற்றிவிடும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை அதிகமாக பெய்துள்ளதால் அந்த நிலை ஏற்படவில்லை. தற்போது நீர்மட்டம் வேகமாக குறைவதால் ஆவியாவதை தடுக்க ஏரிநீர் புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் இதுகுறித்து இடைநிலை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனகராஜன் கூறியதாவது:-
சோழவரம் ஏரியில் நீர்மட்டம் இவ்வளவு வேகமாக குறைவதற்கு ஏரிக்கு வரும் கால்வாய்கள் அடைபடுவதும் நீர்பிடிப்பு பகுதிகள் சுருங்கியதுமே முக்கிய காரணம். நீர்வளத்துறை உடனடியாக ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 2064 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது 2242 மி.கனஅடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. தற்போது 2361 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 380 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இதை வைத்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை 7 மாதங்களுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.