என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூண்டி ஏரியில் 10,000 கன அடி உபரி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
- ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பும் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் மாண்டஸ் புயலை தொடர்ந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பும் உயர்த்தப்பட்டது.
இதன் எதிரொலியால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story






