search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishna water"

    • சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
    • ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    • பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
    • மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.

    இதனை ஏற்று கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.09 அடியாக பதிவாகியது. 1,760 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வினாடிக்கு 220 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 54 சதவீதம் மட்டும் நிரம்பி உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 70 சதவீதமாக உள்ளது. எனவே குடிநீர் ஏரிகளில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தம் 6,866 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது(மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மி.கன அடி ஆகும். சென்னை யின் குடிநீர் தேவைக்காக தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை வருகிற நவம்பர், டிசம்பர் மாதம் தீவிரம் அடையும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை குடிநீரை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்யும் வகையில் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற தமிழக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 220 கன அடி மட்டுமே வருகிறது. கடந்த வாரத்தில் தண்ணீர் வரத்து 100 கனஅடிக்கும் கீழ் குறைந்தது. ஆந்திர விவசாயிகள் தங்களது விவசாயத்துக்கு அதிக அளவு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கடந்த 2 மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் தற்போது 2082 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2235 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 89 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2347 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன. அடியில் 377 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் மொத்தம் 7130 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த தண்ணீர் இருப்பில் 60 சதவீதம் ஆகும்.

    • கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1- ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவது வழக்கம். அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை அதிகமாக பயன்படுத்தும்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைவதும், தண்ணீர் பயன்பாடு குறைத்துக்கொண்டால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாவதுமாக உள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மே 4-ம் தேதி முதல் இன்று காலை வரை 1.467 டி எம் சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.68 அடி ஆக பதிவானது. 1.666 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 500 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுப்பது வழக்கம்.
    • பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 4-ந் தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 310 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

    ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுப்பது வழக்கம். அவர்கள் அதிகமாக தண்ணீர் எடுக்கும்போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறையும்.

    சமீபத்தில் அதிகப்படியான கிருஷ்ணா தண்ணீர் எடுத்ததால் நீர்வரத்து குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் விவசாயிகள் தண்ணீர் எடுக்கவில்லை.

    இதனால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது விவசாயிகள் மீண்டும் தண்ணீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 110 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 27. 63 அடியாக பதிவானது. 1.252 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கன அடி வீதம் பேபி கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 45 நாட்களில் இதுவரை 1½ டி.எம்.சி. தண்ணீர் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக கிருஷ்ணா நீரை பயன்படுத்தி வந்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.

    மேலும் தற்போது ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் எடுப்பதை குறைத்துள்ளத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். 1.195 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1015 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,613 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சிக்கு கீழ் குறைந்து காணப்படுகிறது. ஏரிகளில் மொத்தம் 7,310 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7,657 மி.கன அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 310 கனஅடியாக வருகிறது.

    ஏற்கனவே பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. எனவே பூண்டி ஏரியில் கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1015 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து புழல் ஏரிக்கு 300 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,613 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3,300 மி.கனஅடியில் 2,459 மி.கனஅடியும், சோழவரம் ஏரியில் 1,081 மி.கன அடியில் 62 கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 468 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    • கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை.
    • கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.507 டி.எம்.சி. ஆகும். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

    இத்திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது வாட்டி எடுத்து வரும் கோடை வெயில் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்ட வேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக்கொண்டது.

    அதன்பேரில் கடந்த 1-ந்தேதி கண்டலேறு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது. வினாடிக்கு 20 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்தது.

    கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது. கடந்த காலங்களில் பலத்த மழைக்கு ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்தக் கரைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பி வைத்தால் கரைகள் சீரமைப்பு பணிகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீரை ஊத்துக்கோட்டை அருகே ஜங்காளபள்ளியில் உள்ள மதகுகள் வழியாக கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    இதனால் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது. இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ஜீரோ பாயிண்டில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை சென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.07 அடியாக பதிவாகியது. 999 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 170 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் குடிநீர் தேவைக்காக 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 5 ஏரிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 911 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.8 சதவீதம் ஆகும்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயல் காரணமாக கொட்டிதீர்த்த கனமழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

    நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதற்கிடையே ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கடந்த 30-ந் தேதி முழு கொள்ளளவான 3231 மி.கன.அடியை எட்டியது.

    பூண்டி ஏரியில் தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அங்கும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கையும் அனுப்பினர்.

    ஆனால் தொடர்ந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 703 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.98 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    ஏரிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 130 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பி உள்ளது. ஏரியில் 2996 மி.கன. அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி). ஏரிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 187 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் 831 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி), கண்ணன்கோட்டை தேர்வாய கண்டிகை ஏரியில் 482 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 500 மி.கன. அடி) தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11. 757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி நவம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வந்தது. இதனிடையே வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    தற்போது மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

    ஏரியில் முழுகொள்ளளவான 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 480 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதால் ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம், மதகுகள் வழியாகவும், கொசஸ்தலை ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் மொத்த உயரமான 21 அடியில் 19.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டு உள்ள கிருஷ்ணா தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும்.
    • வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேரத்தின் போதும், வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதும் நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேலும் தமிழகம்-ஆந்திரா இடையேயான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் 2 கட்டமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் சில நாட்களில் 10 டி.எம்.சி.யை எட்டிவிடும்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போதைய நிலவரப்படி 9.459 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    தமிழகத்துக்கு தற்போது வினாடிக்கு 557 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. அதை வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க கோரி ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஜனவரிக்குள் மீதமுள்ள 6.5 டி.எம்.சி.யை பெறுமாறு நீர்வளத்துறையிடம் ஆந்திரா அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆந்திர அரசு தரும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைப்பது இயலாத காரியம் என்பதால் ஜனவரி மாதத்துக்குள் 4 டி.எம்.சி. தண்ணீரை பெற திட்டமிட்டுள்ளோம். இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் 8 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது", என்றார்.

    • தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.
    • பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 25.71அடி ஆக பதிவாகியது. 947 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 588 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் சென்று கொண்டிருந்தது.

    மழைநீர் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2.105 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×