search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehabilitation work"

    • சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
    • ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    • ராயப்பன்பட்டி சண்முகாநதி நீர்தேக்க கால்வாய் புனரமைக்கும் பணியினை கலெக்டர் , எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
    • புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து விவசாய பயன்பா ட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகாநதி நீர்தேக்க கால்வாய் புனரமைக்கும் பணியினை கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் ெதாடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயி களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்டம் உத்தம பாளையம் வட்டத்தி ற்குட்பட்ட சண்முகாநதி நீர்தேக்க கால்வாய் புனர மைப்பு பணிகள் மேற்கொ ள்ள வேண்டி விவசாயி களின் கோரிக்கையின் அடிப்படையில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி இந்நீர்த்தேக்க கால்வாய் புனரமைப்பு பணிகள் ராயப்பன்பட்டி கிராமத்திலிருந்து மல்லி ங்காபுரம், சின்ன ஓவுலா புரம், எரசக்கநாயக்கனூர், கன்னிேசர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளை யம்மாள்புரம் வழியாக ஓடைபட்டி கிராமம் வரை ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதன்மூலம் நேரடியாக 1640 ஏக்கர் புன்செய் நிலங்களும், நாயக்கர்குளம், பெரியான்குளம் மற்றும் கருவேலங்குளம் ஆகிய 3 கண்மாய்கள் ஆகியவற்றிற்கு மறைமுக பாசனத்திற்கும் தங்குதடையின்றி விவசாயத்திற்கு பாசன நீர் கிடைத்திடும் வகையில் வழிவகை செய்யப்பட்டு ள்ளது.

    மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் மூலம் விவசாய தேவைகள் மற்றும் குடிநீர் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து விவசாய பயன்பா ட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு ரோடு, விநாயகம்பட்டு- சோரப்பட்டு இணைப்பு சாலையில் மறுசீரமைப்பு பணிக்காக புதுவை பொதுப்பணி துறையின் மூலம் ரூ. 12. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு ரோடு, விநாயகம்பட்டு- சோரப்பட்டு இணைப்பு சாலையில் மறுசீரமைப்பு பணிக்காக புதுவை பொதுப்பணி துறையின் மூலம் ரூ. 12. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும் கிராம பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×