search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kandaleru dam"

    • கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் வந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 300 கன அடிவீதம் வந்தடைந்தது.

    இந்நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தற்போது கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 215 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அட. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.26 அடியாக பதிவானது. 1.027 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்காக திறந்து விடப்பட்ட 385 கன அடி தண்ணீர் இன்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து கொண்டு இருக்கிறது. #PoondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் 10-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

    இதைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு பூண்டி ஏரிக்கு தண்ணீர் சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு 10 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 385 கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி.. இதில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியில் நீர் மட்டம் 20.21 அடியாக பதிவானது. 209 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த 11-ந் தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 18.81 அடியாக இருந்தது. 152 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கிருஷ்ணா நதி கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 5 நாட்களில் ஏரியின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்துள்ளது.

    கண்டலேறு அணையில் தற்போது 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 8 டிஎம்சி இருப்பில் வைத்து கொண்டு மீதி தண்ணீரை திறந்துவிட உத்தேசித்து இருப்பதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PoondiLake
    கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது. #Krishnawater
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜனவரி 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட காலத்தில் 2. 253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் நீர்வரத்து இல்லாததாலும், கோடை வெயில் காரணத்தாலும் பூண்டி ஏரியில் தண்ணீர் முற்றிலும் வறண்டு விட்டது.

    இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையாக ஜூலை மாதத்தில் கண்ட லேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

    ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே இம்மாத முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பிதால் உபரி நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட்டனர்.

    இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக உயர்த்தினர்.

    இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது.

    வினாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹென்ரி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர்கள் சுப்புராஜ், அரசு, அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் பிரதீஷ், பழனிகுமார், சதீஷ், பழனிகுமார், சண்முகம் ஆகியோர் மலர் தூவி கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர்.

    இந்த நீர் 25 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 13 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணை தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #Krishnawater

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் தமிழக எல்லைக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரியில் தேக்கப்படும்.#Krishnawater

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கியமானதாக உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு தேவைப்படும் போது சென்னை குடிநீருக்கு திறந்து விடப்படுகிறது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் இருந்த தண்ணீர் பெருமளவு வறண்டு விட்டதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    ஜூலை மாத தவனையின் படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால்போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் கிருஷ்ணா நதி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியது.

    அங்கிருந்து சோமசிலா அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஸ்ரீசைலத்திலிருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது 300 கனஅடி தண்ணீர்திறந்து விடப்படுகிறது. இதனை படிப்படியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 10 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கோடை வெயிலால் கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பாயும் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரம் வரைதான் தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    கண்டலேறு-பூண்டி இடையே தூரம் 177 கிலோ மீட்டர் ஆகும். இதன்படி பார்த்தால் கிருஷ்ணா நதி நீர் இந்த வார முடிவில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. தமிழக எல்லையில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்ல கூடுதலாக மேலும் ஒருநாள் ஆகும்.

    கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தாலும் உடனடியாக சென்னைக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நீர் வந்ததும் நீர் மட்டம் குறைந்தது 30 அடியாக உயர்ந்த பின்னரே பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். #Krishnawater

    கண்டலேறு அணையில் இருந்து இன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தின் அளவை பொறுத்து சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்படும். #Krishnawater
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கொடுக்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை.

    ஆந்திராவில் பற்றாக்குறை நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியவில்லை என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அக்டோபர் மாதம் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர். இதற்கிடையே 15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா கால்வாயில் சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சோமசிலா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து இன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் பயணித்து காளஹஸ்தி வந்ததும் அங்கிருந்து திருப்பதிக்கு குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.

    அதன்பிறகு நீர்வரத்தின் அளவை பொறுத்து சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் அனுப்பப்படும். #Krishnawater

    ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழையால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் கிருஷ்ணா நீர் ஒருமாதத்தில் சென்னைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Poondidam #KrishnaWater
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் பங்கீடு திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும்.

    கண்டலேறு அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி இரண்டாம் தவணையாக ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி) நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரியில் மீன்கள் தொடர்ந்து செத்து மிதந்து வருகின்றன.

    போதிய நீர் இல்லாததால் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறப்பு கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது. பேபி கால்வாயில் மட்டும் 10 கனஅடி தண்ணீர் சென்னை வாட்டர் போர்டு அனுப்பி வந்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு முற்றிலும் நின்று உள்ளது.

    எனவே கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது சாத்தியமாக உள்ளது.


    இதற்கிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களுக்கு முன் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்ரீசைலம் அணை நிரம்பி வழிகிறது.

    இங்கிருந்து கோமசிலா அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளனர். இந்த தண்ணீர் கண்டலேறு அணைக்கு வந்த பிறகு பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    ஸ்ரீசைலம் - பூண்டி இடையே 438 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் ஸ்ரீசைலம் - சோமசிலா இடையே தூரம் 111 கிலோ மீட்டர். எனவே அடுத்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு திறந்துவிடப்படும்.

    பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஆயிரத்து 123 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 10 சதவீதம் ஆகும்.

    வீராணம் ஏரி இப்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கிருஷ்ணா நீரும் பூண்டி ஏரிக்கு வரும்பட்சத்தில் சென்னை குடிநீர் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்ய முடியும். #Poondidam #KrishnaWater
    ×