search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று திறப்பு
    X

    சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று திறப்பு

    கண்டலேறு அணையில் இருந்து இன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தின் அளவை பொறுத்து சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்படும். #Krishnawater
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கொடுக்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை.

    ஆந்திராவில் பற்றாக்குறை நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியவில்லை என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அக்டோபர் மாதம் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர். இதற்கிடையே 15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா கால்வாயில் சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சோமசிலா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து இன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் பயணித்து காளஹஸ்தி வந்ததும் அங்கிருந்து திருப்பதிக்கு குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.

    அதன்பிறகு நீர்வரத்தின் அளவை பொறுத்து சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் அனுப்பப்படும். #Krishnawater

    Next Story
    ×