search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் உறுதி
    X

    பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் உறுதி

    • பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் உறுதியளித்தனர்
    • இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவால் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு எதிரே பேருந்து நிழற்குடை சேதமடைந்து இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதனை அகற்றிவிட்டு, அதே இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், அப்பகுதியில் அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிழற்குடை கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிழற்குடை அமைக்கும் பணி தடைப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்ட கோரி, கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில்

    மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பயணியர் நிழல் குடை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த அடிப்படையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்ட த்தால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×