search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai drinking water"

    • தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.
    • தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட கல்குட்டைகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் பருவமழை காலங்களில் அதிக அளவில் வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இதை தவிர்க்கும் வகையிலும், தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.

    இந்திட்டத்தின் படி கல்குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து சென்னைக்கு குடிநீராக சப்ளை செய்யப்படும்.

    தற்போது குடிநீர் வாரியம் ஆய்வு செய்ததில் 25 கல்குட்டைகளில் 0.350 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இந்த தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு தினமும் 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கல்குட்டைகளில் இருக்கும் தண்ணீரை எடுத்துவிட திட்டமிட்டு உள்ளனர். இதனால் மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் கல் குட்டைகளில் தேங்கும். கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்படும்.

    சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

    மேலும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும். தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உட்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரப்பு குறைந்து உள்ளது. பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பபாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்.

    இந்த ஏரிகளில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சில நாட்களுக்குதான் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஜதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விட முடியாத என்று ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பருவ மழை பெய்யும் என்ற நோக்கத்தில் நெற்பயிரிட்டனர். ஆனால் மழை பொய்த்து போனதால் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கால்வாய் வழியாகதான் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்துவரும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு இன்று காலை கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கும் வந்து சேருகிறது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இன்று காலை வெறும் 949 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்த தருணத்தில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு ஆறுதல் தரும் வி‌ஷயமாகும்.

    கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் பூண்டி ஏரிக்கு செல்லும்.

    பூண்டி ஏரியில் 3321 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 172 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஆண்டு 3.88 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது.

    இதற்கிடையே தற்போது கண்டலேறு அணையில் 11.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. எனினும் இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். #DrinkingWater
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    தற்போது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது.

    ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது வெறும் 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சோழவரம் ஏரி வறண்டதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கடந்த மாதங்களில் ஏரிகளில் போதிய தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டதால், சோழவரத்தில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சோழவரம் ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய தண்ணீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    சோழவரம் ஏரியானது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு முற்றிலுமாக வறண்டது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்பட்டால் அல்லது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்தால் மட்டுமே சோழவரம் ஏரியில் தண்ணீரை நிரப்ப முடியும்.

    இருந்த போதிலும் பூண்டி ஏரியில் 13 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 673 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 423 மில்லியன் கன அடி என 1.1 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.

    இதுதவிர வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #DrinkingWater
    வீராணம் தண்ணீர் வருவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VeeranamLake

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 11 சதவீதம் ஆகும்.

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. பூண்டி ஏரியில் 117.25 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 753 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 467 மில்லியன் கனஅடியும் நீர் உள்ளது.

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கடந்த ஆண்டைப் போல இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படலாம் என்ற கவலையில் பொது மக்கள் உள்ளனர்.

    வீராணம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தாலும் வீராணம் ஏரி தண்ணீரை வைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.

    வீராணம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 47 அடி தண்ணீர் உள்ளது (மொத்த நீர்மட்டம் 47.50 அடி) ஏரிக்கு கீழ் அணையில் இருந்து 1,400 கனஅடி தண்ணீர் வருகிறது. 74 கனஅடி தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது.

    இது குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ‘கடந்த ஆண்டு 4 ஏரிகளும் சேர்த்து வெறும் 262 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதனை வைத்து அக்டோபர் மாதம் இறுதி வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

    நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் நீர் கைகொடுக்கும்.

    மேலும் தேவை அதிகரித்தால் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீரை வினியோகிக்கவும் திட்டம் உள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பொது மக்கள் கவலைப்பட தேவையில்லை’ என்றனர்.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பு நீரேற்று நிலையத்திற்கு காவிரி தண்ணீர் வந்ததையடுத்து, சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. #VeeranamLake #Cauvery
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முதன்மையாக விளங்கும் இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும்.

    நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. நேற்று 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 41.55 அடியாக இருந்தது. இன்று அது மேலும் ஒரு அடி உயர்ந்து 42.45 அடியாக அதிகரித்துள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. சில நாட்களில் இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. #VeeranamLake #Cauvery

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #VeeranamLake
    சேத்தியாத்தோப்பு:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணை வழியாக கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது.

    இதையடுத்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.

    கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியை கடந்த 27-ந் தேதி வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 32 அடியில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.50 அடியாக இருந்தது.

    இதே அளவு தண்ணீர் வந்தால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் வீராணம் ஏரி மொத்த உயரமான 47.50 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைப்பதற்காக சேத்தியாத்தோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை நேற்று முன்தினம் காவிரிநீர் தொட்டது.

    இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக ராட்சத குழாய்கள், மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீராணம் ஏரி நிரம்பியதும் முதலில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதன் தொடர்ச்சியாக சேத்தியாத்தோப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.  #VeeranamLake
    ×