search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "honest"

    அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் பிரச்சினைகளை எளிதில் கையாள முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். #sagayam #tngovt #honest

    கோவை:

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நான் பொறுப்பில் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டு வருகிறது என கூற இயலாது.

    பொன் மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக, நான் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அரசு துறையில் இருக்கிற காரணத்தால் எதுவும் கூற இயலாது.

    எங்களை போன்ற அலுவலர்களை எங்கே பணியமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் அரசுக்கு உள்ளது. எந்த பணியிடம் அளித்தாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் இந்த பிரச்சினையை எளிதில் கையாள முடியும் என்றார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது பதவியை தொடர உயர்நீதிமன்றத்தை நாட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் நாம் அரசிடம் தான் தீர்வுக்காக எதிர்பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்றார். #sagayam #tngovt  #honest

    நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் மோடி தகர்த்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #NarendraModi #RahulGandhi
    ஐதராபாத்:

    டிசம்பர் 7-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாணவர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் பலப்பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவைகளை நிறைவேற்றவில்லை.



    பிரதமர் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகள் அளித்தார். தான் இந்த நாட்டின் ‘காவலாளி’ பிரதம மந்திரி அல்ல என்றும் கூறினார். நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டார்.

    பிரதமர் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பணக்காரர்கள் 15 பேரின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார். இந்திய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அவர் தயாரா?

    எல்லோரையும் ஒரே மாதிரி கவனிக்கும்படி தான் கூறுகிறோம். பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #NarendraModi #RahulGandhi
    ×