குமரி மாவட்டத்தில் மகளிர் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு

பாரதிய ஜனதா கூட்டத்தில் கண்டனம்மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங்களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம்
மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் மேலசங்கரன் குழியில் நடைபெற்றபோது எடுத்த படம்.
மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் மேலசங்கரன் குழியில் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

பாரதிய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலசங்கரன்குழியில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் ஸ்ரீகலா, ராமநாதன், பொதுச் செயலாளர் ஜெக நாதன், மாவட்ட துணை பொதுச்செயலாளர் வினோத், செயலாளர் சுடர்க்கின மனோகரகுமார், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், விளையாட்டு மேம்பாட்டு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, ஒன்றிய பொருளாளர் சுகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் உட்பட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் பல மகளிர் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை யின் இந்த நடவடிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுக்கும், கட்சிக்கும் அயராது உழைத்த பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது. மாவட்டத்தில் அச்சமின்றி தேர்வு எழுதும் வழியில் பரிக்ஷா பெ சர்ச்சா நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்டத் தில் சிறப்பாக நடத்திய கல்வியாளர் பிரிவு பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. மாவட்டத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங் களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை, 4 வழி சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தேவையான மணல் ஜல்லி கட்டுமான பொருட்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு டன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க அயராது பாடுபட்டு வரும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ண னுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் ஒன்றிய தலைவர் பொன். சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com