search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன.
    • பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை நகரில் நாளை 21,நாளை மறுநாள் 22 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,உடுமலை நகராட்சி திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன. ஆகையால், புதிய மின் உந்துகள் பொறுத்தப்படுவதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் உடுமலை நகரம் முழுவதும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×