என் மலர்
நீங்கள் தேடியது "water supply stop"
- 5 ஊராட்சிகளில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- 1766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1766 குடியிருப்புகளுக்கு நாளை (9ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓசூர் திட்ட பராமரிப்பு கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம் ஓசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக ஓசூர் மாநராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகள், தளி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகள், ஓசூர் ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகள், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகள், வேப்பனபள்ளி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகள், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 844 சாலையில், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே சாலை பணியின் போது புதியதாக பதிக்கப்பட்ட 850 எம்.எல்.ஏ., குடிநீர் குழாய்கள் ஏற்கனவே குடிநீழ் வழங்கும் குழாயில் ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 9ம் தேதி (நாளை) முதல் வருகிற 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டும் ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம், தளி, ஓசூர், சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 1766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் தமிழ்நாடு குடிநீழ் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஆணையர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பிரதான குழாய்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு முதல் 26-வது வார்டு வரையிலுள்ள பகுதிகளுக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்வதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






