என் மலர்
நீங்கள் தேடியது "Veeranam Lake"
- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும்.
இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 756 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வீராணம் ஏரிக்கு செங்கால், கருவாட்டு ஓடைகள் வழியாக வினாடிக்கு 1,365 கன அடி நீர் வருகிறது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 45.50 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி இதற்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதாலும், மழைக்காலம் என்பதாலும் ஏரியில் இருந்து உபரி நீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 1,570 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
- சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை 5-வது முறையாக கடந்த 1-ந்தேதி எட்டியது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து பல்வேறு ஓடைகள், மதகுகள் வழியாக வீராணம் ஏரிக்கு 470 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் கடந்த வாரம் வெயிலின் தாக்கத்தில் ஏரியின் நீர் மட்டம் குறைந்த நிலையில் தற்போது தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி 6-வது முறையாக முழு கொள்ளளவான 47.40 அடியை எட்டியது.
சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வி.என். எஸ். மதகு மூலம் 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 470 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு 247 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரி பகுதியில் 11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும்.
இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்துக்கேற்ப வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நீர்வரத்து காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து 4 முறை வீராணம் ஏரி நிரம்பியது. அதனை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பியது மற்றும் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டனர்.
தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 அடியில் இருந்த கீழணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது.
அதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.
இதன் மூலம் நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கீழணை, வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.
- வீராணம் ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 1337 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி உள்ளது.
மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.
மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 342 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50அடியை எட்டி உள்ளது.
மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வழிகளான வடவாறு, செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 47.50 அடி கொள்ளளவை எட்டியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 650 மில்லியன் கன அடியாக சரிந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தின் காரணமாக ஏரியில் நீர் வரத்து 2 வாரங்களில் உயர்ந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர், மே. 29-
வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 857 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்த வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு இந்த ஏரி நிரப்ப்படும்.
மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். கோடை வெயில் மற்றும் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் 43.10 அடியாக சரிந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.65 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் 9 அடி நீர் மட்டம் உள்ள கீழணையில் தற்போது 3.6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
- கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது. இதனைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நீர்வரத்து, மழை இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் சரிந்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 47 அடியை எட்டி நிரம்பியது. ஏரிக்கு 15,154 கனஅடி நீர் வருகிறது. ஏரியில் இருந்து வடவாறு வழியாக 1,319 கனஅடி நீரும், வி.என்.எஸ் மதகு வழியாக 1,075 கனஅடி நீரும், சென்னை குடிநீருக்காக 65 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.
- வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் தற்போது அணை 8.5 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதாலும், தொடர் மழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.
வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன்படி ஏற்கனவே 44 அடி தண்ணீர் இருந்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் வீராணம் ஏரிக்கு 2 அடி தண்ணீர் நிரப்பி தற்போது 46 அடி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு தற்போது 7.5 அடி முழு கொள்ளளவு எட்டப்பட்டு உள்ளது.
இதன் மூலம் சேத்தியாதோப்பு அணையில் இருந்து 3வாய்க்கால் வழியாக பரங்கிப்பேட்டை பகுதிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த பகுதியில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகிறது.
- கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் பரப்பில் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் முடிவடைகிறது.
அதிக நீர் பிடிப்பு ஆதாரமான வீராணம் ஏரியில் 47.50 அடி (1,465 மில்லியன் கன அடி) தண்ணீர் தேங்கி வைக்கப்படுகிறது.
சம்பா பருவ காலங்களில் காட்டுமன்னார் கோவில், குமராட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏரியின் அனைத்து மதகுகளையும் அடைத்து முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. தற்போதைய நிலவரப்படி 45.65 அடி தண்ணீர் உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி நீரேற்று நிலையத்தில் மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீராக அனுப்பி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏரியில் படிப்படியாக தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் கோடையில் சென்னைக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்தை சமாளிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
- வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டத்தில் அதிக நீர் பிடிப்பு கொண்ட ஏரி வீராணம் ஏரியாகும்.
இந்த ஏரி சேத்தியாதோப்பு பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளத்துடன், 5 கிலோ மீட்டர் அகல பரப்பளவு கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
ஏரியில் இருந்து சம்பா பருவத்தில் கீரப்பாளையம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, புவனகிரி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கடைமடை டெல்டா பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் ஏரியின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துள்ளதால் ஏரியில் 1465 மில்லியன் கன அடியாக இருந்த தண்ணீர் தற்போது 1,011 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.
ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடையில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.






