search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது
    X

    நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது

    • கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரி கடந்த மாதம் நிரம்பியது. இதனைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நீர்வரத்து, மழை இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் சரிந்தது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 47 அடியை எட்டி நிரம்பியது. ஏரிக்கு 15,154 கனஅடி நீர் வருகிறது. ஏரியில் இருந்து வடவாறு வழியாக 1,319 கனஅடி நீரும், வி.என்.எஸ் மதகு வழியாக 1,075 கனஅடி நீரும், சென்னை குடிநீருக்காக 65 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

    வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×