search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் வீடூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது
    X

    வீடூர் அணை நிரம்பியுள்ள காட்சி.

    விழுப்புரம் வீடூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது

    • மயிலம் வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது.
    • வீடூர் அணையின் மொத்த அளவு 32 அடியாகும் தற்போது நீர் 28.925 அடி உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் வீடூர் அணை கட்டு அமைந்துள்ளது. இதனால் மயிலம் வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 1959-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் வீடூர் அணை திறந்து வைக்கப்பட்டது. வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு, புதுச்சேரியில் 3200 ஏக்கர் நிலம் பாசனவசதியை பெறுகிறது.

    புதுச்சேரி, வானுார், மயிலம் பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வீடூர் அணையின் மொத்த அளவு 32 அடியாகும் தற்போது நீர் 28.925 அடி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் மயிலம், விக்கிர வாண்டி ஒன்றியத்திலுள்ள சித்தணி, கணபதிபட்டு, ரெட்டிகுப்பம், எம்.குச்சிபாளையம் கயத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கி்ன்றனர். விவசாயிகள் சம்பா பட்டத்திற்கு நாற்றங்கால் தயரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    Next Story
    ×