என் மலர்
நீங்கள் தேடியது "tag 133489"
- இன்று முதல் வரும் 19-ம்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
- ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் போதும் ஐந்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். அதைத் தொடர்ந்து இன்று முதல் வரும் 19-ம்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொரோனோ நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர்.
அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
- 18-ந்தேதி குலுக்கல் மூலம் புதிய மேல்சாந்திகள் தேர்வு
- நவம்பர் 16-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் ( தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடை பெறும்.
அதே போல் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தீபாராதனை காட்டுவார்.
18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல், அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள்நடைபெறும். இந்த பூஜைகள் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
முன்னதாக நடப்பு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருடத்திற்கு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களில் மேல்சாந்தியாக சேவையாற்ற புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் 18-ந் தேதி காலை சன்னிதானத்தில் நடைபெறும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரில் ஒருவர் வீதம் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு புதிய மேல்சாந்திகளை, குலுக்கல் மூலம் தேர்வு செய்ய, பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் உத்தரவின் படி, பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்த கிருத்தி கேஷ் வர்மா என்ற சிறுவனும், பவுர்ணமி.ஜி. வர்மா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன் பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு உள்ளது. கொரோனா தொடர்பான மற்ற கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது.
ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி கோவில் நடை மீண்டும் 24-ந் தேதி மாலையில் திறக்கப்படும். 25-ந் தேதி ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்று இரவு நடை அடைக்கப்படும். பின்னர் நடப்பாண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.
- இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது.
- மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோல மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரு விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்கு முன்பு கேரள போலீசாரின் இணைய தளம் மூலம் இந்த முன்பதிவு நடந்து வந்தது.
தற்போது இந்த முன்பதிவை சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது.
இன்று முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கும்,ஐப்பசி மாத பூஜைக்கான விழாவிலும் பங்கேற்க பக்தர்கள் இன்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 22-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
- முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.
தொடர்ந்து 22-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு உள்ளது.
- பம்பை முதல் சபரிமலை வரை உழவாரப்பணி நடக்க உள்ளது.
- அய்யப்ப பக்தர்கள் 250 பேர் கொண்ட குழுவினர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர்.
திருப்பூர் :
அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் திருப்பூர் மாவட்ட யூனியன் சார்பில் பம்பை முதல் சபரிமலை வரை உழவாரப்பணி நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை அய்யப்ப பக்தர்கள் 250 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டர்படை நிர்வாகி சுனில்குமார் குருசாமி தலைமையில் நாளை 20-ந் தேதி இரவு 8:30 மணிக்கு திருப்பூரில் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர்.
வருகிற 21-ந் தேதி அதிகாலை உழவாரப்பணியை தொடங்க உள்ளனர். முதலில் பம்பை நதி படிக்கட்டு பகுதியையும், பிறகு கன்னிமூல கணபதி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தண்ணீர்விட்டு கழுவி சுத்தம் செய்கின்றனர்.சுப்பிரமணியர் கோவில், மரக்கூட்டம், சரங்குத்தி, நடப்பந்தல் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய இருக்கின்றனர். இரவு 18 படிகளையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தல், சபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றியுள்ள இடங்கள்,மஞ்ச மாதா கோவில், பாண்டி தாவளம் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர்.வருகிற 22-ந் தேதி அய்யப்ப தரிசனம் முடித்து சபரி பீடம், அப்பாச்சி மேடு, நீலிமலை, பம்பை பஸ் நிலையம் பகுதிகளை சுத்தம் செய்து, உழவாரப்பணியை நிறைவு செய்து திருப்பூர் திரும்ப இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம்.
- 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும்.
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல, மகரவிளக்கு சீசன் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து தேவஸ்தான மந்திரி கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படும். 17-ந்தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்படும்.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி விலக்கி கொள்ளப்படும்.
வழக்கம்போல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம். முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் உள்பட 12 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொரோனா பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- கொரோனா பிரச்சினை குறைந்து வருவதால் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
கொரோனா பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும் தரிசனத்திற்கு செல்லும் முன்பு பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளும் இருந்து வந்தன.
இந்த நிலையில் கொரோனா பிரச்சினை குறைந்து வருவதால் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து வர இருக்கின்ற மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் காலங்களில் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவிலுக்கு வருவது தொடர்பாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
- 18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
- வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தமிழ் மாத பிறப்பின் போது திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாதம் வருகிற 18-ந்தேதி பிறப்பதை முன்னிட்டு, சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த முன்பதிவை இது வரை கேரள காவல்துறை செயல்படுத்தி வந்தது. 2010-ம் ஆண்டு முதல் 2011 வரை சபரிமலையில் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த ஏ.டி.ஜி.பி. பி. சந்திரசேகரனால் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கையாள வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செயல்படுத்துகிறது.
இதற்காக தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் தனியார் நிறுவனத்துடன் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் சுமார் 50 வாரிய ஊழியர்கள் தொழில் நுட்பம் குறித்து பயிற்சியும் பெற்றனர்.
- நேற்று ஓணப்பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
- ஓணப்பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணப்பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்காக கோவில் நடை கடந்த 6-ந் தேதி திறக்கப்பட்டது. நேற்று ஓணப்பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்பட்டது.
ஓணப்பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
- சபரிமலையில் தங்க மேற்கூரை சீரமைப்பு பணி முடிந்தது.
- 10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கருவறைக்கு மேல் பகுதியில் தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க மேற்கூரையில் 15 இடங்களில் மழைக்காலங்களில் லேசான நீர் கசிவு காணப்பட்டது. அதனை சீரமைக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. தொடர்ந்து சீரமைப்பு பணி கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
திருவாபரணம் கமிஷனர் பைஜூ, தலைமை பொறியாளர் அஜித்குமார் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணியை கண்காணித்தனர். பி.பி. அனந்தன் ஆசாரி தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உள்ளன.
கேரளாவில் வருகிற 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். மாத பூஜை காலங்களைப் போலவே நெய் அபிஷேகம், கலச பூஜை, களப பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடக்கிறது.
கோவிலில் 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாளை முதல் 10-ந்தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- 8-ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- 10-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.
தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் 8-ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
அதே சமயத்தில் நடை திறக்கப்படும் நாள் முதல் 10-ந்தேதி வரை நிலக்கல் மகாதேவர் கோவிலில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்கு பிறகு நடை 10-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறக்கப்படும்.
இதற்கான ஆன்லைன் முன்பதிவும் நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு குறித்த புகார் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
- சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரை நீர் கசிவை சரிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
மழை காலங்களில் தங்க மேற்கூரையில் நீர் கசிவு ஏற்படுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில் அதிகாரிகள் மேற்கூரையில் கசிவு எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிபுணர் குழுவும் கூரையை பார்வையிட்டனர்.
இதில் தங்க மேற்கூரையில் தகடுகளை இணைக்கும் ஆணிகள் மூலமாக நீர் கசிவு ஏற்படுவது தெரியவந்தது. இதனை சரிசெய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு குறித்த புகார் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சிறப்பு ஆணையர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரை நீர் கசிவை சரிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் மூலம் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரை நீர் கசிவை செப்டம்பர் 7-ந் தேதிக்குள் சீர்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.






