என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனமழையால் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய நட்சத்திர ஏரி.
கொடைக்கானலில் தொடர்மழையால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்
- பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- இதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர்.
கொடைக்கானல்:
எழில் கொஞ்சும் அழகும், தலையை முட்டும் மேகக்கூ ட்டங்களும், இதமான தட்ப, வெப்பநிலையும் நிலவுவ தால் கொடை க்கானலை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகி ன்றனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்க ர்ஸ்வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர். நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள ஏரி ச்சாலை முழுவதும் போக்கு வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
படகு சவாரியும் பல மணிநேரம் நிறுத்தப்பட்டது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் சிறுகடை வியாபாரிகள், ஓட்டல்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.






