நிலக்கோட்டையில் 10 செ.மீ. பதிவு தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது.
வறண்டு கிடந்த வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
வறண்டு கிடந்த வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை, தோப்பு ப்பட்டி, கோடாங்கிநாயக்கன் பட்டி, என்.ஊத்துப்பட்டி, குளத்துப்பட்டி, சீத்தாபுரம், கோட்டூர், முசுவனூத்து, அணைப்பட்டி, விளாம்பட்டி பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பூ மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோடைகாலத்தை மிஞ்சி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொது மக்கள் சிரமமடைந்தனர். இந்த நிலையில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது. ஆங்காங்கே மரங்க ளும் சாய்ந்தது. இருந்த போதும் தொடர்மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது உழவு பணியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் தேங்கி சாலையில் ஓடியது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட னர். எனவே ஆக்கிர மிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் 34, கொடை க்கானல் ரோஸ்காடன் 36.5, பழனி 5, சத்திரப்பட்டி, 57.6, நிலக்கோட்டை 104.6, வேடசந்தூர் 19.5, புகையிலை நிலையம் 19.5, காமாட்சிபுரம் 4.7 மி.மீ. என மொத்தம் மாவட்டம் முழுவதும் 326.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com