என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் பெய்த சாரல் மழை
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. எனவேதான் இந்தியா மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை ரசித்து தங்களது கேமராக்களில் படம் பிடித்து வருகிறார்கள். அதோடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.
தென் மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்தது. எனவே இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் உருளை, கேரட், பீன்ஸ் ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அதன் பின்னர் மழை ஓய்ந்து விட்டது.
இன்று கொடைக்கானல் பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. காலையிலேயே கரு மேகம் சூழ்ந்ததால் கொடைக்கானல் நகரம் இருளாக காட்சியளித்தது. அதன் பின்னர் லேசானது முதல் மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள இடங்களை ரசித்து பார்த்தனர். இந்த சாரல் மழை பட்டர் பீன்ஸ், கேரட் ஆகியவற்றுக்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்