என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை
திண்டுக்கல்:
கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. கன மழை மற்றும் போக்குவரத்து துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் கொடைக்கானலுக்கு வர பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாகவே சாரல் மழை தொடர்ந்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, தூண்பாறை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அறைகளிலேயே முடங்கி உள்ளனர். வழக்கத்தை விட குளிர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
இயல்பு நிலை திரும்பிய பிறகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்