என் மலர்
நீங்கள் தேடியது "DMK Councilor"
- திருநின்றவூர் நகரச் செயலாளர் தீவை.ரவி மற்றும் அவரது மனைவி நகரமன்ற தலைவர் உஷாராணி ஆகியோர் 10 லட்சம் லஞ்சம் கேட்டு வீட்டுமனை பிரிவிற்கு அனுமதி வழங்க மறுப்பதாக புகார்
- நகராட்சி மன்ற தலைவர் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நகராட்சியில் உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் அதிமுக கவுன்சிலருக்கே வழங்கி வருவதாக குற்றச்சாட்டு
திருநின்றவூர் நகராட்சி 27 வது வார்டில் 78 சென்ட் நிலத்தில் வீட்டுமனை பிரிவு அமைந்து வருகிறது. இந்த இடத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைப்பதற்கான அனுமதியை கடந்தாண்டு CMDA வழங்கிய நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற திமுக நகர இலக்கிய அணி அமைப்பாளராக இருக்கும் BLR யோகானந்தம் என்பவர் திருநின்றவூர் நகராட்சியில் மனு அளித்துள்ளார். இந்த மனு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் உஷாராணி தலைமையில் ஆணையர் ஜீவிதா உள்ளிட்ட அதிகாரிகளும், 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அப்போது வீட்டு மனை அமைக்கும் திமுக நிர்வாகி யோகனந்தம் மனைவியும், 6 வது வார்டு கவுன்சிலருமான தேவி, வீட்டுமனைக்கு அனுமதி வழங்க நகரமன்ற தலைவர் உஷாராணி மற்றும் ஆணையர் ஜீவிதா ஆகியோர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.

திருநின்றவூர் நகர மன்ற தலைவர் உஷாராணி
அதேபோல் அவரது கணவரும் மன்ற கூட்டத்தின் வாசலில் நின்று திருநின்றவூர் நகரச் செயலாளர் தீவை.ரவி மற்றும் அவரது மனைவி நகரமன்ற தலைவர் உஷாராணி ஆகியோர் 10 லட்சம் லஞ்சம் கேட்டு வீட்டுமனை பிரிவிற்கு அனுமதி வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்தார். இதேபோல் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களும் நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் நகரமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்த திமுக கவுன்சிலர்கள் சிலர் கூட்டாக வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர்கள், வீட்டுமனை அனுமதி பெற நகர மன்ற தலைவர், ஆணையர் உள்ளிட்டோர் லஞ்சம் கேட்பதாகவும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு முன்பு இருந்த ஆணையர் கீர்த்தனா கோப்புகளை ஒளித்து வைத்ததாகவும், தற்போது உள்ள ஆணையரும் லஞ்ச பணத்திற்காக அலைக்கழித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் நகராட்சி மன்ற தலைவர் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நகராட்சியில் உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் அதிமுக கவுன்சிலருக்கே வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். நகராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர் இருந்தும், திமுக கவுன்சிலர்களுக்கே இந்த நிலைமை என்றும், இதுதொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
- நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
- முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 28-ந்தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தனது பகுதியில் நடந்த பணிகளுக்கான நிதி சம்பந்தமான கோப்பினை கேட்டுள்ளார்.
அப்போது இளநிலை உதவியாளர் முனியப்பன் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா ராஜா அவரிடம் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்து, அங்கிருந்த நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முனியப்பனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.
மன்னிப்பு கேட்டால் போதுமா? என்று கேட்டதால் முனியப்பன் தானாகவே சென்று ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
- 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர்(வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீடு உள்ள தெருவிற்கு வந்தது. பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசி விட்டு தப்பிச்சென்றது. இதில் மின்விசிறி, விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த கும்பல் இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதற்கு முன்பாக ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்ததையும், ஊழியரை தாக்கி விட்டு தப்பி சென்ற காட்சிகளும் சிக்கின.
இதன்மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் , அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.
இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகள், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் தலா 1 தனிப்படையும், நெல்லை மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கும்பல் நேற்று காலையிலேயே சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்றார்களா? அல்லது சென்னை, மதுரை எங்கேனும் தப்பிச்சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த கும்பலிடம் செல்போன் இல்லை. அவர்கள் 4 பேரும் மோடத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலமாகவே தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் அவர்களை செல்போன் சிக்னல் மூலமாக பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரத்தில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர் குமாரசாமிபட்டி பகுதி தி.மு.க செயலாளராகவும், 14-வது டிவிசன் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு 3 மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து, கதவை தட்டி உள்ளனர்.
கவுன்சிலர் சாந்தமூர்த்தி வந்து யார் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் உங்களை பார்க்க வேண்டும், வெளியே வாருங்கள் என்றனர். ஆனால் கவுன்சிலர் சாந்தமூர்த்தி என்ன பிரச்சினையாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே அந்த மர்ம நபர்கள், வெளியே வாடா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசாருக்கு போன் செய்து இது பற்றி தெரிவித்தார்.
இதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன
- 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத்தலைவராக அருள்வடிவு ஆகியோர் உள்ளனர்.
இந்த நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.
இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், சீரான குடிநீர் விநியோகம், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க வில்லை என கூறப்படுகிறது. ஜம்ரூத்பேகம் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினார்.
ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே 11-ம் வார்டில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஜம்ரூத்பேகம் வீட்டிற்கு சென்று குப்பைகளை அகற்ற வலியுறுத்தினர்.
இதனால் வேதனை அடைந்த ஜம்ரூத்பேகம் மகன்களுடன் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றுவது என்று முடிவு செய்தார். இதன்படி அவர் 11-வது வார்டுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மேட்டுப்பாளையம் வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
- காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.
திருவொற்றியூர்:
சென்னை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் மொத்தம் 46 ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை முதல் மதியம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கே அவர்கள் வேலைக்காக வீட்டில் இருந்து புறப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக பலர் காலை உணவை சமைத்து கொண்டு வரமுடியாமலும், பலர் சரிவர காலைஉணவு சாப்பிடாமலும் இருந்தனர்.
இதனை அறிந்த 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவீ. கணேசன் தூய்மை பணியாளர்களின் பசியை போக்க ஏற்பாடு செய்து உள்ளார். தூய்மை பணியா ளர்கள் 46 பேருக்கும் தினமும் இலவசமாக காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை வழங்கப்படுகிறது. இதற்காக அவர் காலடிப்பேட்டையில் உள்ள தனது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்து உள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் இருந்து டிபன் கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை காலை உணவை சாப்பிட 46 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். காலை உணவுக்காக தினமும் ரூ.1800 செலவு செய்து வருகிறார்.
மேலும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாலும் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து கவுன்சிலர் கவீ. கணேசனிடம் கேட்ட போது, தொலைதூர இடங்களில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலர் காலை உணவு சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு காலை உணவைச் செய்யவோ, வாங்கவோ போதிய பணம் இல்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவாக இட்லி, பூரி, வடகறி, பொங்கல், வடை மற்றும் காபி போன்றவற்றை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். வார்டு அலுவலகத்தில் காலையில் டீ அல்லது காபி தயாரிப்பதற்காக அவர்களுக்கு கியாஸ் ஸ்டவ் மற்றும் டம்ளர் உள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காலை உணவை வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காலை உணவை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசி உள்ளேன். தூய்மை பணியாளர்களின் பசியாற உணவு வழங்குவது மன நிறைவை தருகிறது என்றார்.
- கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பணிகள் குழு தலைவரும், கவுன்சிலருமான சாந்தி முருகன், "கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சுட்டோம். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு, கோடிக்கணக்குல இழந்து ஒடுக்கப்பட்டிருக்கோம். சும்மா ஒன்னும் வரலை. இதையெல்லாம் பார்த்து பொறுத்துட்டு இருக்க முடியாது..." என அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி முன்னிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நீங்கள் பொதுவாக பேசுறீங்க. நீங்கள் எல்லாம் எப்படி உறுப்பினராகி வந்தீங்களோ.. அதுமாதிரி தான் நான் சேர்மன் ஆகி இந்த இடத்துக்கு வந்துருக்கேன். உள்ளாட்சிக்கு கடந்த காலத்தில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்க, தளபதி ஆட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்கன்னு உங்களுக்கு சொல்றேன். கோவைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிங்க என்று முதலமைச்சர் என்னிடம் கேட்டார். அதற்கு 3 கோடி ஒதுக்கியிருக்கோம்னு சொன்னேன், அதற்கு 3 கோடி பத்தாது 300 கோடி ஒதுக்குன்னு முதலமைச்சர் சொன்னார். பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் பத்தாண்டு காலம் நிறுத்திவைக்கப்பட்ட பணி 2 ஆண்டு காலத்தில் நடக்கணும் என்பது இயலாத காரியம். எனவே உங்களுக்கும் ஆதங்கம் இருக்கும். இப்ப சொல்லியிருக்கிங்க.. அதை செய்து கொடுப்போம். உறுதியா செய்கிறோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை என்றார்.
- எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
- உடனடியாக அதனை நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா கருப்பு உடை அணிந்து திடீரென மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் அதிக பெண் கவுன்சிலர்களை ஏற்படுத்தி கொடுத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே உடனடியாக அதனை நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மேயர் சரவணன் கூறும்போது, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.






