search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா
    X

    மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா

    • எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
    • உடனடியாக அதனை நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா கருப்பு உடை அணிந்து திடீரென மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் அதிக பெண் கவுன்சிலர்களை ஏற்படுத்தி கொடுத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆனால் எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே உடனடியாக அதனை நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மேயர் சரவணன் கூறும்போது, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×