என் மலர்
நீங்கள் தேடியது "தேவயானி"
- சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான படம்.
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.
மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வரும் 21-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ப்ரண்ட்ஸ் படத்தின் புதிய மேம்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
- வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
- தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.
மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந்தேதி மீண்டும் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், 'ப்ரண்ட்ஸ்' படமும் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

- திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.
- வாசுதேவன் குடும்பத்திற்கு வெற்றி வரணும்.
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக உருவாகி உள்ளது. இதனை தொடர்ந்து, 3 BHK படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ், நடிகர் சிம்பு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.

இந்த நிலையில், 3 BHK படம் வெற்றிபெற வேண்டி பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.
இதன் பின் சரத்குமார் கூறுகையில், முயற்சி எடுக்கும்போது அந்த முயற்சி வெற்றிக்கரமாக இருக்கனும் என்று சொல்லி இறையருள் வேண்டுவது வழக்கம். அதே போல், வாசுதேவன் குடும்பத்திற்கு வெற்றி வரணும். படத்தில் நடிச்ச எல்லாருக்கும் வெற்றி கிடைக்கணும். படத்தை பார்த்தவர்கள் அளித்துள்ள விமர்சனம் பாசிட்டிவாக உள்ளது. உழைப்புக்கு வெற்றி கிடைக்கணும். நாங்கள் உழைத்துள்ளோம் என்றார்.
- சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
- 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, 3 BHK படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு 3 BHK படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் 3 BHK படம் பார்த்தேன். ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதனால் 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
- சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். சித்தார்த்தின் தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
- சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், '3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் உருக்கமாக எமோஷனலாக இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பம் 2 தலைமுறைகளாக ஒரு சொந்த வீடு வாங்க முயற்சி செய்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்
- இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இப்படத்தை ஏன் மக்கள் வந்து பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு மிக சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். அதில் அவர் " நீங்க ஒரு படம் எதுக்கு பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்காக வந்து பாருங்கள். படத்தின் இயக்குநர், நடிகர்கள், போஸ்டர், பாட்டு , டிரெய்லர் பிடித்து இருந்தால் வந்து படத்தை பாருங்கள். நான் சொன்னேன் என்றெல்லாம் வந்து திரைப்படத்தை பார்க்க வராதீர்கள். நான் படத்தை பார்க்க வற்புறுத்தவில்லை" என கூறியுள்ளார்.
- ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'நீ வருவாய் என'.
- இந்த படத்தில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் திரையுலகில் 'தொட்டால் சிணுங்கி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி, காதல் கோட்டை உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
'நீ வருவாய் என' படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ராஜகுமாரன். அந்த படத்தில் நடிகர்கள் அஜித், பார்த்திபன், நடிகை தேவயானி ஆகியோர் நடித்தனர். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அப்போது நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்து அந்த காதலும் வெற்றி பெற்றது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு தேவயானி நடிக்கவில்லை. கணவர் ராஜகுமாரனுடன் கிராமத்தில் குடியேறி விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். இந்த தம்பதிக்கு பிரியங்கா ராஜகுமாரன், இனியா ராஜகுமாரன் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

ராஜகுமாரன்- தேவயானி
ராஜகுமாரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'நீ வருவாய் என' படத்தின் 2-ம் பாகத் தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயையும், தேவயானி மகள் பிரியங்காவும் ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.
இது பற்றி தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- திரை உலகில் நான் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. 15 வருடங்கள் போராடி தான் சினிமா துறையில் வெற்றி பெற்றேன்.

சஞ்சய்- இனியா தேவயானி
1999-ல் சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான "நீ வருவாய் என" படத்தை முதல் முதலாக இயக்கினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு 2-ம் பாகத்தை உருவாக்கும்படி பலரும் கூறி வந்தார்கள். இப்போது அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.
இந்த படததில் நடிகர் விஜய் மகன் சஞ்சயை நடிக்க வைக்க திட்டம் உள்ளது. எனது மகள்களுக்கும் சினிமா ஆசை உள்ளது. எனவே சஞ்சய் ஜோடியாக எனது மகளை நடிக்க வைக்கவும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
- டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.
- இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.
விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,
"என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.
இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் "என்று கூறி வாழ்த்தினார் .
நாயகன் நகுல் பேசும் போது,
"எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை.
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .
ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.
ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.
பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.
இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது .
சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்." என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1990 கால கட்டங்களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் தேவயானி.
- இவருக்கு இனியா, பிரியங்கா என்ற மகள்கள் உள்ளனர்.
1990 கால கட்டங்களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் தேவயானி. தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி காதல் கோட்டை, நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய், சூரிய வம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்பட பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்.
நீ வருவாய் என படத்தில் நடித்த போது படத்தின் இயக்குனரான ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2001-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற மகள்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்த தேவயானி 'காதலுடன்' என்ற படத்தை தயாரித்து திரை உலகில் தயாரிப்பாளராக உருவெடுத்தார்.
தொடர்ந்து நல்லகுடும்ப தலைவியாக இருந்து வரும் தேவயானி ராஜகுமாரனின் சொந்த மாவட்டமான ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி காய்கறி மற்றும் தென்னை மா மரங்கள் நட்டு விவசாயமும் செய்து வருகிறார். இது மட்டுமின்றி ஆசிரியை பணியில் ஆர்வம் கொண்டு ஆசிரியை படிப்பை முடித்து சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றினார்.
நடிகை, தயாரிப்பாளர், விவசாயி, ஆசிரியை என்ற பன் முகங்களை கொண்ட தேவயானி தற்போது இயக்குனர் பணியில் ஆர்வம் கொண்டு இயக்குனர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கின்றார்.
சென்னையில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரி ஒன்றில் இயக்குனர் பயிற்சி பள்ளியில் படித்து வரும் தேவயானி குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
அடுத்ததாக சினிமாவில் புதிய படம் ஒன்றை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார் தேவயானி. ஏற்கனவே ரேவதி, ஜீவிதா, சுகாசினி, ராதிகா, குஷ்பு ஆகியோர் சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேவயானி இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு இசையை இளையராஜா மேற்கொண்டுள்ளார்.
நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார். 90ஸ் களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் நடிகை தேவயானி தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
"கைக்குட்டை ராணி" என்ற குறும்படத்தை முதன்முறையாக இயக்கி, எழுதி, தயாரித்துள்ளார் தேவயானி. இந்த குறும்படம் 17-வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான குறும்படம் என்ற விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு இசையை இளையராஜா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை பி.லெனின் செய்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ராஜன் மிர்யாலா மற்றும் ஒலி வடிவமைப்பை லட்சுமி நாரயணன் மேற்கொண்டுள்ளார்.
20 நிமிடமான இந்த குறும் படம். ஒரு சிறுமி அவளது தாயை இழந்த பிறகு அவள் எதிர்க்கொள்ளும் சூழலை இப்படம் பிரபளித்து காண்பித்து மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது. இதனை நடிகர் சரத்குமார் தேவயானியை பாராட்டி அவரது சமூக வலைத்தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
"தோழி நடிகை தேவயானி அவர்களுக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முதல்முயற்சியில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்களுடைய கலைப்பயணத்தில் மற்றொரு மைல்கல் அத்தியாயமாக தொடரட்டும் உங்கள் இயக்குனர் பணி." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






