search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nakul"

    • தி டார்க் ஹெவன் படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
    • இதன் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டனர்.

    நகுல் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'தி டார்க் ஹெவன்' என பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான டைட்டில் லுக் போஸ்டரை சசிகுமார், பரத் மற்றும் சிபிராஜ் வெளியிட்டனர்.

    இந்த படத்தை பாலாஜி இயக்குகிறார். டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தி டார்க் ஹெவன் உருவாகிறது. இதில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார்.

     


    ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

    • ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல்.
    • காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தார்.

    2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிகர், பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் கைவசம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் எரியும் கண்ணாடி படமும், ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா படமும் உள்ளது.

    நகுல்-ஸ்ருதி

    நகுல்-ஸ்ருதி

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் அகிரா என்ற மகள் பிறந்தார். சமீபத்தில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளனர். இவர்கள் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

    `காதலில் விழுந்தேன்', `மாசிலாமணி' படங்களில் இணைந்து நடித்த நகுல் - சுனைனா ஜோடி 9 வருடங்களுக்கு பிறகு `எரியும் கண்ணாடி' என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். #EriyumKannadi #Nakul #Sunaina
    நகுல் - சுனைனா இருவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள், புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

    `எரியும் கண்ணாடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சச்சின் தேவ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.



    விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முருகானந்தம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரியாஸ் முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    நகுல் நடிப்பில் அடுத்ததாக `செய்' என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. #EriyumKannadi #Nakul #Sunaina

    பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகுல், ஆரவ் என் மகன் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். #Nakul
    சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். இப்படத்தை அடுத்து ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தனி கதாநாயகனாக ஆனார். தற்போது ராஜ் பாபு இயக்கத்தில் ‘செய்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். 

    இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’எனக்கும் எனது மனைவி ஸ்ருதிக்கும் ஒன்றரை வயதில் மகன் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதைக் கவனித்தேன். உண்மையில் எனக்கு மகனே இல்லை.

     

    அது எனது அண்ணனின் மகன் ஆரவ். அண்ணன் மகன் ஆரவ் எனக்கும் மகன் போலத்தான். ஆனால் எனது சொந்த மகன் அல்ல எனும் வி‌ஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். இப்போதைக்கு எனது குழந்தை எனது மனைவி ஸ்ருதி மட்டும்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
    ×