search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peoples"

    • அக்னி நட்சத்திர வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.
    • வெயிலின் காரணமாக பெரும்பாலானோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென கோடை மழை பெய்த நிலையில், தற்போது கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள அக்னி வெயிலால் மாநகரப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் பகலில் வெகுவாக குறைந்து ள்ளது. பெரும்பா லான வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் குடை பிடித்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது.

    கடுமையான வெயிலின் காரணமாக பெரும்பாலா னோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பணிக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி சாலைகளில் செல்கின்றனர். பெரும்பாலா னோர் வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள் இருக்கும் கடைகளை நாடி செல்கின்றனர்.

    இதனால் இளநீர், தர்பூசணி, பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டமாக சென்று அவர்கள் அருந்துவதை காண முடிகிறது. ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், ஒரு நுங்கு ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சிலர் நுங்கு சர்பத், இளநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வழங்குவது உள்ளிட்ட வித்தியாசமான முறைகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    அக்னி நட்சத்திரம் முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் விரைவில் குறைந்து விடும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • மற்ற வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையை விட்டு இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
    • பொதுமக்கள் தடாகம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பன்னிமடை- திப்பனூர் சாலை உள்ளது. இந்த பகுதியில் 4 வருடங்களாக சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் 40 அடி சாலை அமைக்க வேண்டிய இடத்தில் வெறும் 12 அடி மட்டுமே சாலை அமைப்பதாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்ததும் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தடாகம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் 40 அடிக்கு சாலை அமைக்கலாம். ஆனால் வெறும் 12 அடிக்கே அமைக்கின்றனர்.

    இதனால் மற்ற வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையை விட்டு இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே 16 அடிக்காவது சாலையை அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    • ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கோபி, ஜூன். 27-

    ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

    இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.

    பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். 
     
    இதுதொடர்பாக  சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரிலும் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். #GajaCyclone
    திருச்சி:

    கஜா புயலால் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 3½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 1 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    30 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சரிந்து அழிந்துள்ளன. 32 ஆயிரத்து 706 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. சுமார் 12 லட் சம் மரங்கள் சரிந்துள்ளன. சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் சரிந்து உள்ளன.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 54 லட்சம் பேரின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இத்தகைய வரலாறு காணாத சேதங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டது.

    கஜா புயலின் ஆக்ரோ‌ஷ தாக்குதல் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பறிகொடுத்து விட்டு பரிதவித்தப்படி இருக்கிறார்கள். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு முதலில் சுமார் 150 முகாம்களை உருவாக்கி தயார் நிலையில் இருந்தது. ஆனால் 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து உணவு, உடை, குடிநீர் உள்பட எதுவுமே இல்லாமல் நிர்க்கதியாக நின்ற சோகத்தை கண்டதும் மளமளவென தமிழக அரசு கூடுதல் நிவாரண முகாம்களை உருவாக்கியது.

    4 மாவட்டங்களிலும் சுமார் 625 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டன. இந்த முகாம்களில் முதலில் சுமார் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்தது. புயல் பாதித்த மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் சுமார் 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 97 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கடலோர பகுதி மக்கள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் என 12ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர்.

    இந்தநிலையில் சேதமான வீடுகளை தாங்களாகவே சீரமைத்து அதில் குடிபுகுந்து வருகின்றனர். இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 25 முகாம்கள் வரை செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. காலையில் தங்களது வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள், இரவு ஆகியதும் முகாம்களுக்கு வந்து தங்குகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் 300 முதல் 500 பேர் வரை தங்கியிருந்து வருகின்றனர்.

    ஆலங்குடி, கறம்பக்குடி முகாம்களில் இரவு மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதி மற்றும் உணவுகள் அரசு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



    நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு தினமும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிறைய பேர் மாற்றுத் துணி இல்லாமல் அவதிப்பட்டப்படி இருந்தனர். அத்தகையவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்எண்ணை, தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சுமார் 4 ஆயிரம் படகுகள் சேதம் அடைந்துள்ளதால் கடலில் மீன்பிடிக்க செல்ல இயலாத மீனவர்களும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் படகுகள் வாங்க நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள அனைவருக்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஓரளவு நிவாரணப் பணிகள் முடிந்த பகுதிகளில் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் சீரமைக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் வீடுகளை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள் இன்னமும் நிவாரண முகாம்களிலேயே தங்கி இருக்க வேண்டிய பரிதாபமான, நிர்ப்பந்தமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். முகாம்களில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைத்தாலும், எத்தனை நாட்களுக்குத்தான் முகாம்களிலேயே தங்கி இருப்பது என்ற சலிப்பு ஏழை-எளிய மக்களின் மனதில் நிலவுகிறது. எனவே தங்கள் வீடு மற்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து தரும்படி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிவாரண பணிகளை முழுமையாக செய்து முடிக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து புயலால் பேரழிவை சந்தித்த 4 மாவட்டங்களிலும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் குழுவை அனுப்பி உள்ளது.

    மத்தியக் குழுவினர் கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரை 4 மாவட்டங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்தனர். இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் இது குறித்து கூறுகையில், “நாங்கள் நினைத்ததை விட 4 மாவட்டங்களிலும் மிகப்பெரிய பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மக்களின் நிலையை பார்த்தபோது பரிதாபமாக உள்ளது. இதில் இருந்து மக்கள் துணிவுடன் மீள வேண்டும்” என்றார்.

    மத்திய குழுவினர் நாளை டெல்லியில் கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தயார் செய்ய உள்ளனர். இந்த வார இறுதிக்குள் புயல் பாதிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பரிந்துரை அடிப்படையில் புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்கும். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தங்கள் துயரத்தில் இருந்து மீள்வதற்காக தமிழக அரசு 100 நாள் வேலைத் திட்ட பணியை கையில் எடுத்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 573 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவர்களுக்கு தினமும் ரூ.224 வரை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களிடம் சற்று நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அத்தியாவசிய உதவிகளும் கிடைத்து விட்டால் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட்டு விட முடியும் என்று நம்புகிறார்கள்.

    புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 6980 கிராமங்கள் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. சில கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த கோரி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து உதவிகள் செய்து வருகிறார்கள்.

    இன்று (திங்கட்கிழமை) 11-வது நாளாக நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார பணிகளில் நேற்று முதல் சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மின்சார இணைப்புக் கொடுக்க முன்னுரிமை கொடுத்து இரவு- பகலாக பணிகள் நடந்து வருகின்றன.

    4 மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் போர்க்கால அடிப்படையில் மின் கம்பங்களை நடும் பணி நடந்து வருகிறது. சுமார் 23 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அருமையான ஈடுஇணையற்ற சேவையாக தங்கள் பணியை செய்து வருகிறார்கள்.

    மின் வாரிய ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்குள் ஊரகப் பகுதிகளிலும் முழுமையான மின் இணைப்பு கொடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் ஒவ்வொரு நாளும் மக்கள் கவலையில் தத்தளிக்கிறார்கள். இழந்த சொத்துக்களை மீட்க என்ன செய்வது? இருக்கும் உயிரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் புலம்புகிறார்கள்.

    அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் உதவிகள் செய்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பிறரை எதிர்பார்த்தே காலத்தை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    பல கிராமங்களில் இன்றும் மின்சாரம் வரவில்லை. மண்எண்ணை விளக்கில் பழங்கால வாழ்க்கையை வாழ வேண்டியதுள்ளதே என மக்கள் புலம்புகிறார்கள். வெளியூர்களில் இருந்து ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கொண்டு வரப்பட்டு பணக்காரர்கள் சமாளிக்கும் நிலையில் ஏழைகள் நிலை அவர்கள் வாழ்க்கையை போல வீட்டிலும் எப்போதும் இருள் சூழ்ந்து நிற்கிறது.

    பல பகுதிகளில் கிராம மக்கள் அருகில் உள்ள கண்மாய், ஊரணியில் இருந்து ஊற்றுநீரை குடிநீராகவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    உணவு தருவதற்கு யாராவது வருகிறார்களா என நிவாரண பொருட்கள் வழங்க வரும் வாகனங்களை எதிர்பார்த்து சாலை ஓரங்களில் காத்து கிடப்பவர்களை பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருகிறது.

    இன்னும் 7 நாட்களில் மின் கம்பங்கள் நடும் பணி முழுமையாக முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் சீராக 7 நாட்களுக்கு மேலாகும் என்பதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். #GajaCyclone
    கஜா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #Gaja #GajaCyclone #Narayanasamy
    காரைக்கால்:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை காரைக்காலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை பகல் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்பதால் புதுவை மற்றும் காரைக்காலில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுவையில் இருந்து பேரிடர் மீட்புகுழு காரைக்காலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்று காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். அதிகாரிகள் யாரும் விடுமுறையில் செல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    புயல் கரையை கடக்கும் வரை கடலோர பகுதியில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், பார்வையிட செல்லுதல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.

    புயல் பாதிப்பின் போது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தொலை பேசி எண்கள் மற்றும்செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காரைக்காலை அடுத்த திருநாள்ளாற்றில் உள்ள தர்பாரணேஸ்வரர் கோவில் சார்பில் ரூ.75 லட்சத்தில் புணர் அமைக்கபட்ட எம தீர்த்தம் மற்றும் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கோவில் ஊழியர்களுக்கு கட்டபட்ட குடியிருப்பு மற்றும் கொல்கத்தா பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.1 கோடியே 50 லட்டசத்தில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலகண்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #Gaja #GajaCyclone #Narayanasamy
    காவிரியில் இருந்து விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #Udhayakumar
    திருமங்கலம்:

    திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகை அணை நீர் மட்டம் நேற்று 87.15 அடியாக இருந்தது. ஆதலால் முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 60 அடி கொள்ளளவு வந்துள்ளதால் இன்று இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும் 69 அடி கொள்ளளவு வந்தவுடன் ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது. குறிப்பாக ஆற்றங்கரையில் செல்பி எடுக்கக்கூடாது.

    திருவிழா காலங்களில் முளைப்பாரி கரைக்கக்கூடாது. தாழ்வான பகுதிகளில் சிறுவர்கள் பெரியவர்கள் யாரும் நீச்சல் அடிக்கக்கூடாது. 13 ஆண்டுகளுக்குப் பின் வைகை அணை ஒரு போக சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

    தண்ணீர் திறக்கப்பட்டால் மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறும். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு 18 கால்வாய் பி.டி. ஆர். கால்வாய் பெரியார் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் ஆகிய கால்வாயில் நீர் திறந்துவிடப்படும்.

    கிருஷ்ணராஜசாகர் கபினி அணைகள் திறந்துவிடப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும். உபரி நீரும் தமிழகத்தில் பவானி அமராவதி திருமூர்த்தி அணைகள் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்த்து மொத்தம் காவேரியில் மொத்தம் 2 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேறி வருகிறது.

    காவிரியில் விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்டோரா போட்டு ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு 33 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு உறைவிடம் தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. #TNMinister #Udhayakumar
    ×