search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் - சிபிசிஐடி அறிவிப்பு
    X

    பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் - சிபிசிஐடி அறிவிப்பு

    பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். 
     
    இதுதொடர்பாக  சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரிலும் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    Next Story
    ×