search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்
    X

    காவிரியில் 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்

    காவிரியில் இருந்து விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #Udhayakumar
    திருமங்கலம்:

    திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகை அணை நீர் மட்டம் நேற்று 87.15 அடியாக இருந்தது. ஆதலால் முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 60 அடி கொள்ளளவு வந்துள்ளதால் இன்று இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும் 69 அடி கொள்ளளவு வந்தவுடன் ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது. குறிப்பாக ஆற்றங்கரையில் செல்பி எடுக்கக்கூடாது.

    திருவிழா காலங்களில் முளைப்பாரி கரைக்கக்கூடாது. தாழ்வான பகுதிகளில் சிறுவர்கள் பெரியவர்கள் யாரும் நீச்சல் அடிக்கக்கூடாது. 13 ஆண்டுகளுக்குப் பின் வைகை அணை ஒரு போக சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

    தண்ணீர் திறக்கப்பட்டால் மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறும். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு 18 கால்வாய் பி.டி. ஆர். கால்வாய் பெரியார் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் ஆகிய கால்வாயில் நீர் திறந்துவிடப்படும்.

    கிருஷ்ணராஜசாகர் கபினி அணைகள் திறந்துவிடப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும். உபரி நீரும் தமிழகத்தில் பவானி அமராவதி திருமூர்த்தி அணைகள் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்த்து மொத்தம் காவேரியில் மொத்தம் 2 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேறி வருகிறது.

    காவிரியில் விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்டோரா போட்டு ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு 33 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு உறைவிடம் தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. #TNMinister #Udhayakumar
    Next Story
    ×