குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. 38 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 410-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரனின் அறிவுறுத்தலின்படியும், கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி வழிகாட்டுதல்படியும், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.மலர்க்கொடி தலைமையில் திருப்பூர் நகர்புறம், தாராபுரம், உடுமலை மற்றும் காங்கயம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் தொழில் சம்பந்தமான நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என 19 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாதது கண்டறியப்பட்டு கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 38 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 410-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாதந்தோறும் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின் போது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆர்.மலர்கொடி தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com