search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புயல் எச்சரிக்கை ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்
    X

    ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள மீட்பு பொருட்களை படத்தில் காணலாம்.

    புயல் எச்சரிக்கை ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்

    • வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    ராசிபுரம்:

    வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரன் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரப்பர் படகுகள், கயிறு, லைப் ஜாக்கெட்கள், வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் பெரு வெள்ளம் சமயத்தில் மக்களை பாது காப்பாக தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவன முடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×