search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meat waste"

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளகோவில் பகுதிகளில் இறைச்சி கடை நடத்துபவர்கள் கோழி, ஆட்டு இறைச்சி, மீன் கழிவுகளை பொது இடங்களில், சாலைகளில் வடிகால் பகுதிகளில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. ஆகையால் இறைச்சி கடை நடத்தி வருபவர்கள் இறைச்சி கழிவுகளை பெறுவதற்கு என நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் கொடுக்க வேண்டும்.

    அதனை மீறுபவர்கள் மீது அபராதமும் மற்றும் கடை உரிமத்தை ரத்து செய்வது போன்ற சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • ராணிப்பேட்டை நகர சபை கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வரும் செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 என ரூ.7000 கோடி நிதியையும் மற்றும் பட்ஜெட்டில் தமிழக மக்களின் அறிய பல பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி நேற்றைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நேற்று நடந்த ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கவுன்சிலர்கள் வார்டுகளில் கொசு மருந்து தெளிப்பதில்லை.குடிநீர் பிரச்சினை உள்ளது.மின்விளக்குகள் அமைக்க வேண்டும.ஈமச்சடங்கு நிதி சரியாக வரவில்லை.மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்கள்.

    மேலும் கவுன்சிலர்கள் பிரதான சாலைகள் நடுவே தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் விபத்துகள் நடக்கின்றன. மேலும் வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ராணிப்பேட்டை நகரில் எல்.இ.டி. மின்விளக்குகள் பிரகாசமாக எறிவது போல் கோயில் பள்ளிவாசல் தேவாலயம் சந்திப்புகள் இடங்களில் எல்.இ.டி. பல்புகளை அமைக்க வேண்டும். பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று பெய்த மழையில் கால்வாய் அடைப்பினால் அங்கு மழை நீர் அதிக அளவில் தேங்கியது.மேற்கண்ட கால்வாயை சீரமைக்க வேண்டும்.ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் சில விஷமிகள் ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.அவ்வாறு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதத்தோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகம் ஒட்டியுள்ள வீடுகளில் பாம்பு தொல்லை அதிகளவில் உள்ளது. பாம்புகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் 30 வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என திமுக, காங்கிரஸ், விசிக, அதிமுக கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் இதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என உறுதியளித்தார்.

    • 5 கிலோமீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது.
    • நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

     உடுமலை :

    உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது.உடுமலை நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன.இங்கு காய்கறி மற்றும் மக்கும் தன்மையுள்ள கழிவுகளை உரமாக மாற்றுதல்,விரைவில் மக்கும் தன்மையற்ற பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் விதிகளை மீறி, சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் இங்கு இறைச்சி மற்றும் மீன் கழிவுகள் அரைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சம்பவத்தன்று, இரவில் நகராட்சி குப்பைக்கிடங்குக்கு இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அத்துடன் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 2002 ம் ஆண்டு சிவசக்தி காலனி பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சி குப்பைக்கிடங்கு இந்த பகுதிக்கு மாற்றப்பட்ட போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது குப்பைகளை தரம் பிரிக்கவும்,காய்கறிக்கழிவுகளை உரமாக மாற்றவும் மட்டுமே பயன்படுத்துவதாக உறுதியளித்தார்கள். மேலும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் வித மாகவோ,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவோ எந்த பணிகளும் இங்கு நடைபெறாது என்று உறுதியளித்தனர்.ஆனால் தற்போது அந்த விதிகள் எதையும் மதிக்காமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல்,சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை அரைத்து மறுசுழற்சி செய்யும் வகையிலான எந்திரங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து இறைச்சிக் கழிவுகள்,வாகனங்கள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு அரைக்கப்படுகிறது. இதுதவிர கேரள மாநிலத்திலிருந்தும் இறைச்சி கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.இதனால் இந்த பகுதியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது.

    அழுகிய இறைச்சி கழிவுகள் மட்டுமல்லாமல் நோய் தாக்கி இறந்த கோழிகளும் இங்கு கொண்டு வரப்படுவதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் இறைச்சி கழிவுநீரை சுத்திகரிக்காமல் நிலத்தில் விடுவதால் நிலத்தடி நீர் பாழாகி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.பொதுவாக இறைச்சிக் கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுவதும் அரைக்கப்படுவதும் இரவு நேரங்களில் ரகசியமாக நடைபெறுகிறது. எனவே பணிகளை தடுத்து நிறுத்தும் விதமாக இரவில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை சிறைபிடித்தோம்.அதுகுறித்து வருவாய்த்துறை,நகராட்சி,சுகாதாரத்துறை,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை.இதனால் இறைச்சி கழிவுகளுடன் வாகனங்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தோம்.மேலும் சட்ட விதிகளை மீறி நகராட்சி குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகளை அரைக்கும் எந்திரம் நிறுவ அனுமதியளித்த அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றனர்.

    • இறைச்சி கடை உரிமையாளர்கள் இறைச்சி கடைகளில் கண்ணாடி தடுப்பு வைக்க வேண்டும்.
    • இறைச்சி கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவது குறித்த ஆலோசனை கூட்டமானது மங்கலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி மங்கலம் நால்ரோடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் உள்ளது. இறைச்சிகடை உரிமையாளர்கள் இறைச்சிக்கழிவுகளை மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து அவினாசி செல்லும் ரோட்டில் கொட்டிச்செல்கின்றனர். இந்த நிலையில் இறைச்சி கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவது குறித்த ஆலோசனை கூட்டமானது மங்கலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி , மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் இறைச்சிகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பேசுகையில் ,

    " இறைச்சி கடை உரிமையாளர்கள் இறைச்சி கடைகளில் கண்ணாடி தடுப்பு வைக்க வேண்டும். இறைச்சி கழிவுகள் கொட்ட ஊராட்சியில் ஒதுக்கப்படும் இடத்தில் மட்டுமே கழிவுகள் கொட்டப்பட வேண்டும். அனைத்து இறைச்சி கடைகளுக்கும், தொழில் உரிம கட்டணங்களை வருகிற 28-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். கழிவுகள் அகற்ற ஊராட்சியால் ஏற்படுத்தப்படும் வாகனத்திற்கான செலவினத்தை இறைச்சி கடை உரிமையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • ஆடு, கோழி, மீன் போன்றவற்றில் மீதமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
    • இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    காங்கயம் :

    திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று காங்கயம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சிக்காகப் பயன்படுத்தும் ஆடு, கோழி, மீன் போன்றவற்றில் மீதமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் தினமும் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு சில இறைச்சிக் கடைகளில் இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே இது போன்று திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன், கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×