என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
வெள்ளக்கோவில் பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளகோவில் பகுதிகளில் இறைச்சி கடை நடத்துபவர்கள் கோழி, ஆட்டு இறைச்சி, மீன் கழிவுகளை பொது இடங்களில், சாலைகளில் வடிகால் பகுதிகளில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. ஆகையால் இறைச்சி கடை நடத்தி வருபவர்கள் இறைச்சி கழிவுகளை பெறுவதற்கு என நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் கொடுக்க வேண்டும்.
அதனை மீறுபவர்கள் மீது அபராதமும் மற்றும் கடை உரிமத்தை ரத்து செய்வது போன்ற சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






