search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general manager"

    • அலங்காநல்லூர் பகுதியில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்தி ரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்த னர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, மரியம்மாள்குளம் உள்ளிட்ட பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பசு கடன், பால் மாடு பராமரிப்பு கடன் வங்கிகள் மூலம் பெற்று தருவது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது, மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. பகுதி அலுவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும் என ஆவின் பொது மேலாளர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.

    திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளர் லஞ்சம் வாங்கியது குறித்து அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அலிபிரி பகுதியில் சிம்ஸ் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியின் பொது மேலாளராக மோகன் முரளி என்பவர் இருந்து வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் மருந்துகடை வைப்பதற்கு அனுமதி கேட்டு மோகன் முரளியிடம் மனு கொடுத்தார்.

    அப்போது மருந்து கடை வைக்க அனுமதி தரவேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத புருஷோத்தமன் திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை புருஷோத்தமனிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் மோகன் முரளியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

    இந்த வழக்கு நெல்லூர் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    அதில் லஞ்சம் பெற்ற சிம்ஸ் ஆஸ்பத்திரி பொது மேலாளர் மோகன் முரளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். #tamilnews
    பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி, பொது மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. #AirIndia #AirHostess
    மும்பை:

    பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் பொது மேலாளராக (தலைமையகம்) பணியாற்றும் ஒரு உயர் அதிகாரி, தனக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக விமான பணிப்பெண் ஒருவர், கடந்த மே மாதம் குற்றம் சாட்டினார்.

    மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். மத்திய பெண்கள் நலத்துறை மந்திரி மேனகா காந்தியை நேரில் சந்தித்து முறையிட்டார். அவரது புகார் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி, பொது மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஏற்கனவே மூத்த விமானியாக இருந்ததால், விமானி பொறுப்புக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறினார். 
    ×