search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public distribution"

    • நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
    • பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுரைப்படி சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செல்போன் எண் பதிவு மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில்

    பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019 -ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 13-ந் தேதி நடக்கிறது.
    • சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோக திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    திருவாரூர் தாலுகா பழையவலம் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா மகிழஞ்சேரி கிராமத்தில், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் குடவாசல் தாலுகா நெய்க்குப்பை கிராமத்தில், திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா, அன்னுக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா, அனுமந்தபுரம் கிராமத்தில், திருவாரூர் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் தலைமையிலும் நடக்கிறது.

    மன்னார்குடி தாலுகா, கீழநத்தம் கிராமத்தில், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பல் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பருத்தியூர் கிராமத்தில், திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா, பின்னத்தூர் கிராமத்தில் பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே, தொடர்புடைய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8-ந் தேதி) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்- புல்லங்குடி (நியாய விலைக்கடை, ராமேசுவரம் வட்டம்-அரியாங்குண்டு - (இ-சேவை மைய கட்டிடம்), திருவாடானை வட்டம் - புதுப்பட்டினம் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - வாலங்குடி (இ-சேவை மைய கட்டிடம்.

    முதுகுளத்தூர் வட்டம் -வெங்கலக்குறிச்சி (நியாயவிலைக்கடை), கடலாடி வட்டம் வாலி நோக்கம் (நியாய விலைக்கடை), கமுதி வட்டம்- தலவநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி).

    கீழக்கரை வட்டம் குளபதம் (நியாய விலைக் கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - ஆப்பிராய் (நியாய விலைக் கடை) ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் கிளாங்குண்டல் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் ராமேகவுண்டன்புதூர் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் கே.அய்யம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் தும்பலப்பட்டி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வருவாய் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற மனுக்களை பதிவு செய்யலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (10-ந்தேதி) கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-வாணி (நியாயவிலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-மாங்காடு-(சமுதாயக் கட்டிடம்), திருவாடானை வட்டம்-சோழியக்குடி (நியாய விலைக்கடை).

    பரமக்குடி வட்டம்-வழிமறிச்சான் (இ-சேவை மையக்கட்டிடம்), முதுகுளத்தூர் வட்டம்-மீசல் (இ-சேவை மையக் கட்டிடம்), கடலாடி வட்டம்-ஒருவானேந்தல் (நியாயவிலைக்கடை கட்டிடம்).

    கமுதி வட்டம்-பேரூர் (ஆசாரி திருமண மகால் கட்டிடம்), கீழக்கரை வட்டம்-கீழதில்லையேந்தல் (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-கொத்தியார்கோட்டை (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை பொது மக்கள் இந்த முகாம்களில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 வட்ட ங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாலுகா தேவிபட்டணம் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் தனி வட்டாட்சியர் குடிமைப்பொருள் வழங்கல் தமிம் ராசா தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் காளிமுத்தன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார், ஆதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வழங்கல் அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பார்கள்.
    • ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் வெள்ளகோவில் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் பாப்பான்குளம் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கும் நடக்கிறது.

    திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் விஜயாபுரம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் பெரியவாளவாடி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் வடமுகம் காங்கயம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் கிராமத்துக்கு தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பார்கள். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    கரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியின் தேவைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்.
    கரூர்:

    கரூர் அருகேயுள்ள மண்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியாம்பாளையம் எனும் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியானது சிறிய கட்டிடத்தில் இயங்கிய போதிலும் மாணவர்களின் கல்வியையும், அவர்களது தனித்திறமையையும் மேம்படுத்துவதில் ஆசிரிய- ஆசிரியைகள் ஆர்வமாக செயல்படுகின்றனர். மேலும் மாணவர்களிடத்தில் உள்ள நிறை- குறைகளை அவர்களது பெற்றோரிடத்தில் எடுத்து கூறி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் ஊர் பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோரும் இந்த பள்ளியை மேம்படுத்துவதற்காக தங்களால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வருகின்றனர். இதன் காரணமாக பெற்றோர்- ஆசிரியர்களிடத்தில் சரியான புரிதல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டில் சிவியாம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீர்வரிசையாக கொடுக்க பொதுமக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று ஊரில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் நோட்டு புத்தகம், பேனா-பென்சில் பாக்கெட்டுகள், சாக்பீஸ் பெட்டிகள், கடிகாரங்கள் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றனர். பின்னர் திருமண சீர்வரிசை கொண்டு வருவதை போல தாம்பூல தட்டுகளில் அந்த பொருட்களை வைத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை பெமினா விழிமலரிடம் அந்த பொருட்களை கல்வி சீர்வரிசையாக ஒப்படைத்தனர்.

    அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா வரவேற்று பேசினார். ஊரின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிராம கல்விக்குழு தலைவர் மகேஷ் மற்றும் இந்திராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தலைமை ஆசிரியை பெமினா விழிமலர் பேசினார்.

    இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினை போன் மூலம் தொடர்பு கொண்ட மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாமியப்பன், பொதுமக்கள்- பள்ளி ஆசிரியர்கள் நல்லுறவு தொடர வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் சிவியாம்பாளையத்தில் தொடக்க பள்ளி முடிந்ததும் அடுத்த கட்ட கல்வி பயில சில கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது. சரியான பஸ் வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமும் காலை, மாலை வேளையில் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×