search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்  நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

    • முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வழங்கல் அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பார்கள்.
    • ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் வெள்ளகோவில் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் பாப்பான்குளம் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கும் நடக்கிறது.

    திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் விஜயாபுரம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் பெரியவாளவாடி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் வடமுகம் காங்கயம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் கிராமத்துக்கு தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பார்கள். ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×