search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்
    X

    பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

    • பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8-ந் தேதி) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்- புல்லங்குடி (நியாய விலைக்கடை, ராமேசுவரம் வட்டம்-அரியாங்குண்டு - (இ-சேவை மைய கட்டிடம்), திருவாடானை வட்டம் - புதுப்பட்டினம் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - வாலங்குடி (இ-சேவை மைய கட்டிடம்.

    முதுகுளத்தூர் வட்டம் -வெங்கலக்குறிச்சி (நியாயவிலைக்கடை), கடலாடி வட்டம் வாலி நோக்கம் (நியாய விலைக்கடை), கமுதி வட்டம்- தலவநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி).

    கீழக்கரை வட்டம் குளபதம் (நியாய விலைக் கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - ஆப்பிராய் (நியாய விலைக் கடை) ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×