search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்
    X

    பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

    • ராமநாதபுரம் மாவட்ட பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (10-ந்தேதி) கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-வாணி (நியாயவிலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-மாங்காடு-(சமுதாயக் கட்டிடம்), திருவாடானை வட்டம்-சோழியக்குடி (நியாய விலைக்கடை).

    பரமக்குடி வட்டம்-வழிமறிச்சான் (இ-சேவை மையக்கட்டிடம்), முதுகுளத்தூர் வட்டம்-மீசல் (இ-சேவை மையக் கட்டிடம்), கடலாடி வட்டம்-ஒருவானேந்தல் (நியாயவிலைக்கடை கட்டிடம்).

    கமுதி வட்டம்-பேரூர் (ஆசாரி திருமண மகால் கட்டிடம்), கீழக்கரை வட்டம்-கீழதில்லையேந்தல் (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-கொத்தியார்கோட்டை (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை பொது மக்கள் இந்த முகாம்களில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 வட்ட ங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×