தூத்துக்குடி தாலுகாவிலுள்ள கிராமங்களில் ஜமாபந்தி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது

கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது. 23-ந் தேதி சங்கரப்பேரி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.
தூத்துக்குடி தாலுகாவிலுள்ள கிராமங்களில் ஜமாபந்தி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி தாலுகாவில் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது. 16-ந் தேதி உமரிக்கோட்டை, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, அல்லிகுளம், மறவ ன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்கு சிலுக்கன்பட்டி, 17-ந் தேதி முத்துசாமிபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி, அய்யனடைப்பு, ராமசாமிபுரம், தளவாய்புரம், கூட்டுடன்காடு, பேரூரணி, 18-ந் தேதி திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபட்டி, ராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், சேர்வைக்காரன் மடம், குலையன்கரிசல், 19-ந் தேதி கோரம்பள்ளம் பகுதி1, 2, குமாரகிரி, முள்ளக்காடு பகுதி 1, 2, மீளவிட்டான் பகுதி 1, 2, ஆகிய கிராமங்களுக்கும், 23-ந் தேதி சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அந்தந்த நாட்களில் தங்களது குறைகள் தொ டர்பான மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com