ராசிபுரம் தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்ற கோர்ட்டு ஊழியர்கள்

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார். இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.
ஜப்தி செய்வதற்காக ராசிபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள்.
ஜப்தி செய்வதற்காக ராசிபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள்.
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார். இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

அதற்காக அப்போது வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர். தற்போது ராசிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் மேல்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை அமுல்படுத்தா ததால் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து நேற்று கோர்ட்டு ஊழி யர்கள் ஜப்தி செய்ய தாசில்தார் அலுவல கத்திற்குச் சென்றனர்.

ஆனால் தாசில்தார் சுரேஷ், மாவட்ட கலெக்ட ரிடம் எடுத்துச் சொல்லி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது ஜப்தி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதால் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

தாசில்தார் அலுவல கத்தை கோர்ட்டு ஊழியர் கள் ஜப்தி செய்ய சென்ற தால் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com