search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை, சதுரகிரிக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    திருவண்ணாமலை, சதுரகிரிக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், திருவண்ணா–மலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது. எனவே, இந்த வழித்–தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×