என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமாவாசை, யுகாதியை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
- வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம்:
பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.






