திண்டிவனத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனை

திண்டிவனத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.குற்றவாளிகள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
Published on

விழுப்புரம்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு நிபுணர்கள் திண்டிவனம் ெரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து திண்டிவனம்- மரக்காணம் சாலையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி நாராயணன், தலைமை போலீ சார் அன்புவேல், சோலை, போலீசார் அய்யனார், அப்துல் ரசீத் மற்றும் போலீ சார் தீவிர வாத தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாகன சோத னையில் ஈடுபட்டனர்.

சந்தேகம் படும்படியான நபர்கள் யாரேனும் வருகி றார்களா? எனவும் சோத னையில் ஈடுபட்ட போலீசார் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் குற்றவாளி கள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் முழு வதும் வாகன சோதனை நடைபெறுவது குறிப்பிட த்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com