என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு அபராதம்
- குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் என மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம்.
மதுரை
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி மதுரை பள்ளிக் கல்வித்துறை உதவி யுடன் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை, அனை வருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், 14 வயது நிரம்பாத குழந்தைகளை வேலையிலும், 18 வயது நிரம்பாதவர்களை அபாய மான தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.
மேலும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இயலும். எனவே குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி ஏதேனும் தெரியவந்தால் தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்