என் மலர்
நீங்கள் தேடியது "ராட்சத பாறை"
- தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
- பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பபட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
இந்த பாறை அடிவாரத்தில் உள்ள மேல்தெருவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பாறை வெங்கடாசலத்தின் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும், அந்த சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதி தடுத்து நின்றதால், வீட்டில் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
மேலும், அந்த மேல் தெருவில் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாறை உருண்டு விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பத்தினர், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீட்டுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தாசில்தார் வளர்மதி, போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறையை பார்வையிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள், மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலையில் இருந்து இந்த ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து அடிவார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பத்திரமாக மீட்பு பணிகளில் கிருஷ்ணகிரி போலீசார், தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மீட்பு பணி குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அடிவார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்களது குடியிருப்புகளுக்கு இடையே விழுந்த ராட்சத பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த பாறை மேலும் உருண்டு விழுந்து சாலை வரை வந்திருந்தால் அடுத்தடுத்து உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நசுங்கி பலியாகி இருப்பார்கள். அந்த பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
- பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அருவங்காடு:
குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகுதிக்கு சென்று சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பர்லியார் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
இது மட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்களும் முறிந்து விழுகிறது.
மேலும் அவ்வப்போது பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் விழுந்தது.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார் வேகமாக சென்று விட்டதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கடப்பாரையைக் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றினர்.
இதனிடையே குன்னூர்-கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி அருகே ராட்சத சாம்பிராணி மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அகற்றினர்.
- கல்வராயன் மலை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது.
- போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலையில் துரூர், தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்வ ராயன் மலை ஓடை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் பெரியார் மேகம் போன்ற நீர்வீழ்ச்சியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இந்நி லையில் நேற்று முன் தினம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை யால் துருவூர் செல்லும் சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இைத தொடர்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது .அருகிலுள்ள தரைபாலமும் மழைநீர் வெள்ளத்தில் அடித்து ெசல்லப்பட்டது.
துரூர் சாலையில செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கல்வராயன் மலை அடிவாரத்தில் பெய்த கன மழையால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மங்கலம் மற்றும் அருளம் பாடி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அந்த வழி யாக வருபவர்களை மாற்று வழியில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.